செய்திகள் :

Air India: MP-கள் பயணித்த விமானத்தில் தொழிற்நுட்பக் கோளாறு; `அதிஷ்டத்தால் தப்பினோம்' - வேணுகோபால்

post image

இந்திய அரசின் Air Corporations Act மூலம் தேசியமயமாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம், அதிக நட்டம் காரணமாக 2022 பிப்ரவரி மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் தனியார்மயமாக்கி, டாடா சன்ஸ் குரூப்புக்கு விற்றது. அதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது பல்வேறு புகார்கள் எழுந்துவருகிறது. குறிப்பாக சமீபத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 240 பேர் உயிரிழந்த விவகாரம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

அதற்குப் பிறகும் ஏர் இந்தியா விமானங்கள் பல்வேறு தருணங்களில், பல்வேறு காரணங்களுக்காக தரையிறக்கப்பட்டு வருகிறது. அதன் தொடராக நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் காங்கிரஸ் செயலாளரும், எம்.பி-யுமான வேணுகோபால் உள்ளிட்ட 4 எம்.பி-கள் பயணித்திருக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி வேணுகோபால் தன் எக்ஸ் பக்கத்தில், ``திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI 2455, பயங்கரமான துயரத்தை நெருங்கிச் சென்றது. ஏற்கெனவே விமானம் தாமதமாகத்தான் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, முன்னெப்போதும் இல்லாதளவு கொந்தளிப்பில் சிக்கினோம். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, கேப்டன் விமானத்தில் சிக்னல் கோளாறு இருப்பதாக அறிவித்து சென்னைக்கு திருப்பி விடப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், தரையிறங்கும் அனுமதிக்காக காத்திருந்தோம்.

எம்.பி.வேணுகோபால்
எம்.பி.வேணுகோபால்

முதல் முயற்சியில் தரையிறங்க முயன்றபோது அதிர்ச்சியூட்டும் விதமாக அந்த ஓடுபாதையில் வேறொரு விமானம் இருந்ததாகக் கூறப்படுகிறது. கேப்டனின் விரைவான முடிவு விமானத்தில் இருந்த ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றியது. இரண்டாவது முயற்சியில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. கேப்டனின் திறமையால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். இதுபோன்ற தவறுகள் மீண்டும் ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தையும் அவர் டேக் செய்திருக்கிறார்.

அது உண்மையல்ல

எம்.பி வேணுகோபாலின் பதிவுக்கு பதிலளித்த விமான நிறுவனம்,``சென்னைக்கு திருப்பி விடப்பட்டது சந்தேகத்திற்குரிய தொழில்நுட்பக் கோளாறு, மோசமான வானிலை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். சென்னை விமான நிலையத்தில் முதல் தரையிறங்கும் முயற்சியின் போது, ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததால் முதல் முயற்சியில் தரையிறக்கம் தடைபட்டது என்பது உண்மையல்ல.

Air India
Air India

சென்னை விமான போக்குவரத்து ஆணையமே, ஒரு சுற்றுச் சுற்றிச் செல்ல பைலட்டுக்கு அறிவுறுத்தியது. இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள எங்கள் விமானிகள் நன்கு பயிற்சி பெற்றவர்கள். மேலும் இந்த விஷயத்தில், அவர்கள் சரியான நடைமுறைகளைப் பின்பற்றினர். இதுபோன்ற அனுபவம் தொந்தரவாக இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்களுக்கு ஏற்படுத்திய சிரமத்திற்கு வருந்துகிறோம். இருப்பினும், பாதுகாப்புதான் எப்போதும் எங்கள் முன்னுரிமை" என விளக்கமளித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மகாராஷ்டிரா: யாரும் உதவ முன்வராத விரக்தி; இறந்த மனைவியின் உடலை பைக்கில் கட்டி எடுத்துச்சென்ற கணவர்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் நடந்த விபத்தில் கியார்சி அமித் என்ற பெண் இறந்துபோனார். நாக்பூர் மற்றும் ஜபல்பூர் சாலையில் கியார்சியும் அவரது கணவர் அமித்தும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்... மேலும் பார்க்க

'ரத்தன் டாடா மட்டும் இருந்திருந்தால்.!' - இழப்பீடு தாமதமாவது குறித்து அமெரிக்க வழக்கறிஞர்

கடந்த ஜூன் 12-ம் தேதி, குஜராத்தில் இருந்து இங்கிலாந்து கிளம்பி சென்ற ஏர் இந்திய விமானம் விபத்துகுள்ளாகியது.இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, 'தி AI-171 நி... மேலும் பார்க்க

சீனா: பயணியுடன் பள்ளத்தில் விழுந்த கார்; `ரோடோ டாக்ஸி சேவை' பாதுகாப்பானதா? - எழும் கேள்விகள்

தென்மேற்கு சீனாவில் பாய்டு நிறுவனத்தின் தானியங்கி அப்பல்லோ கோ 'ரோபோ டாக்ஸி' சேவையில் பயணம் செய்த ஒருவர் படுகுழிக்குள் விழுந்துள்ளார். சோங்கிங் என்ற பகுதியில் நடந்த இந்த விபத்தில், குழிக்குள் விழுந்த ப... மேலும் பார்க்க

அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிப்பு; வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு - சாத்தூரில் சோகம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுபாண்டியன் என்பவர் வீட்டில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட உராய்வின் கா... மேலும் பார்க்க

சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வனச்சரகத்திற்கு உள்பட்ட நான்காம் எண் பீட் பகுதியான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் உள்ள வருசநாடு சந்திப்பு மணிக்கட்டி பகுதியில் காட்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் தம்பதி பலி

தஞ்சாவூர் அருகே கள்ளம்பெரம்பூர் 2ம் சேத்தி மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (54) விவசாயி. இவரது மனைவி ராமாயி (47) இவர்கள் இருவரும் பூதலுார் சாலையில் உள்ள தங்கள் வயலுக்கு சென்றுள்ளனர். நேற்று இரவ... மேலும் பார்க்க