செய்திகள் :

America: வெனிசுலா மக்களைச் சிறையிலடைத்த அமெரிக்கா; "கடைசியாக போனில் பேசும்போது.." - ஒரு தாயின் அழுகை

post image

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் குடியேறியவர்களை வெளியேற்றும் நிகழ்வு தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இது இதற்கு முன்னரும் நடந்திருந்தாலும், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதற்குப் பின்னர், இந்த வெளியேற்றம் மிகுந்த கவனம் பெற்று வருகிறது.

அப்படிக் குடியேறிய 200-க்கும் மேற்பட்ட வெனிசுலா நாட்டு மக்களைத் தற்போது ட்ரம்ப்பின் அமெரிக்க அரசு எல் சால்வடாரில் இருக்கும் சிறையில் அடைத்துள்ளது. எல் சால்வடார் என்பது மத்திய அமெரிக்காவில் இருக்கும் ஒரு நாடாகும். ட்ரம்ப் அரசு வெனிசுலா மக்களை அமெரிக்காவிலிருந்து எல் சால்வடாருக்கு நாடு கடத்தி, அங்கிருக்கும் கொடும் சிறையில் அடைத்துள்ளது. இந்த சிறை கடுமையான குற்றவாளிகளுக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக சிறை ஆகும்.

'இந்த மக்களை நாடு கடத்தக்கூடாது' என்று கடந்த சனிக்கிழமை அமெரிக்க நீதிமன்றம் தற்காலிக தடை விதித்திருந்தும், இந்த மக்கள் நாடு கடத்தப்பட்டிருக்கிறார். இந்த உத்தரவு வரும்போதே, மக்களை விமானத்தில் ஏற்றி, பயணம் தொடங்கிவிட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மீறியதற்குக் காரணம் சொல்கிறார்கள்.

Trump
நீதிமன்ற உத்தரவை மீறிய அமெரிக்க ட்ரம்ப் அரசு!

இந்த மக்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பாமல், சிறையில் அடைத்ததற்கு முக்கிய காரணம், 'டிரென் டி அரகுவா' என்னும் வெனிசுலாவைச் சேர்ந்த பயங்கரவாதக் குழு ஆகும். இந்தக் குழுவைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும், போதை மருந்து கடத்தல் செய்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு இருந்தது. இப்போது அமெரிக்க அரசு சிறையில் அடைத்துள்ள 200 பேரும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள்தான் என்று அமெரிக்க அரசால் கூறப்படுகிறது.

ஆனால், வெனிசுலாவைச் சேர்ந்த மிரெலிஸ் காசிக் என்னும் பெண்மணி, "என்னுடைய மகன் கடந்த சனிக்கிழமை காலை எனக்கு போன் செய்து தன்னை வெனிசுலா மக்கள் குழுவுடன் வைத்திருக்கிறார்கள். எங்களை எங்கேயோ கொண்டு செல்லப்போகிறார்கள். ஆனால், எங்கே என்று தெரியவில்லை என்று பேசினான். அதன் பின்னர், அவன் எனக்கு போன் செய்யவில்லை. எங்கே இருக்கிறான் என்பதும் தெரியவில்லை" என்று கூறுகிறார். உரிய விசா வைத்திருக்கும் வெனிசுலா கிட்னி மருத்துவர் ஒருவரும் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்.

நீதிமன்ற உத்தரவை மீறியும், உரிய ஆவணங்கள் வைத்திருப்பவர்களையும், அப்பாவி மக்களையும் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக வரும் தகவல்களால் அமெரிக்காவில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Canada: கனடாவின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்கள்; யார் இவர்கள்?

கனடாவின் புதிய பிரதமர்கார்னியின்அமைச்சரவையில் அனிதா ஆனந்த் பொருளாதார முன்னேற்றம், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான (Innovation) அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். கமலா கேரா சுகாதாரத்துறை அமைச்சராக இட... மேலும் பார்க்க

Railway Exams: தமிழகத் தேர்வர்களுக்கு வெளிமாநிலத்தில் மையம்; ரயில்வே சொல்லும் காரணம் என்ன?

ரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் நடத்தப்படும் ஏ.எல்.பி (Assiaitant Loco Pilot) பணிக்கான தேர்விற்கு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த 80 சதவீதம் தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்ப... மேலும் பார்க்க

Aurangzeb: "பட்னாவிஸ் ஒளரங்கசீப்பைப் போல..." - காங். தலைவர் பேச்சு; மகாராஷ்டிராவில் வெடித்த சர்ச்சை

மொகலாய மன்னர் ஔரங்கசீப் தனது கடைசிக் காலத்தில் மகாராஷ்டிராவில்தான் வாழ்ந்து மறைந்தார். அவரது உடல் தற்போது சாம்பாஜி நகர் மாவட்டத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது கல்லறையை அகற்ற வேண்டும் என்ற க... மேலும் பார்க்க

கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துடைமை... இந்தியாவில் இஸ்லாமியர் நிலை பற்றிய புதிய அறிக்கை சொல்வது என்ன?

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கான அரசின் திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து ’Rethinking Affirmative Action for Muslims in Contemporary India’ என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத சிறுபான்மையினரின் பொருளாத... மேலும் பார்க்க

``ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணையை ஆளுநர் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்" - உச்ச நீதிமன்றம்

அதிமுக ஆட்சிக் காலத்தில் (2016 - 2021) தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு மூன்று கோடி ரூபாய் வரை சேர்த்ததாகப் புகார்கள் எழுந்தது... மேலும் பார்க்க

மார்ச் மாத பௌர்ணமி; `முடிஞ்சிடுச்சு'ன்னார் தலைவர் - `திக் திக்' சம்பவத்தை நினைவுகூறும் மல்லை சத்யா

``ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி இரவைஎன்னால் மறக்கவே முடியவில்லை'' என்கிறார் மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர்மல்லை சி.ஏ.சத்யா. 'ஏன், அப்போது, என்ன நடந்தது' அவரிடமே பேசினோம்.''1999ம் வர... மேலும் பார்க்க