செய்திகள் :

America Party: புதிய கட்சியைத் தொடங்கினார் எலான் மஸ்க் - முழு விவரம்!

post image

கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் ஆகிய இருவரும் முட்டி மோதிக்கொள்கிறார்கள்.

இதற்கு மிக முக்கிய காரணம், 'ஒன் பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில்'.

இந்த பில் குறித்து பேசப்பட்ட போதே, இந்த பில் நடைமுறைக்கு வந்தால், புதிய கட்சி தொடங்குவேன் எனக் கூறி, கட்சி தொடங்குவது குறித்து எக்ஸ் தளத்தில் போல் வைத்தார்.

அதில் 80.4 சதவிகித மக்கள் கட்சி தொடங்க வேண்டும் என்று வாக்களித்திருந்தார்கள்.

ட்ரம்ப் - எலான் மஸ்க்
ட்ரம்ப் - எலான் மஸ்க்

கடந்த ஜூன் 4-ம் தேதி, அமெரிக்காவின் சுதந்திர தினம். அன்று எக்ஸ் தளத்தில், 'இரு கட்சிகளின் ஆட்சியில் இருந்து விடுபட வேண்டுமா... அமெரிக்கா கட்சியைத் தொடங்க வேண்டுமா' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு 65.4 சதவிகித மக்கள் 'ஆம்' என்று பதிலளித்திருந்தனர்.

எலான் மஸ்க் பதிவு

இதனையடுத்து நேற்று தனது எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் பதிவிட்டிருப்பதாவது...

"இரண்டில் ஒருவருக்கு, புதிய கட்சி தொடங்கப்பட வேண்டும். அது நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்!

நமது நாட்டை வீண் செலவு மற்றும் ஊழல் மூலம் திவாலாக்குவதைப் பார்க்கும் போது, நாம் ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம். ஜனநாயகத்தில் அல்ல.

இன்று, உங்களுக்கு உங்களது சுதந்திரத்தைத் தர, அமெரிக்கா கட்சி தொடங்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா: கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,00,000 நிதி - புதின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதையடுத்து, சில மாகாணங்களில் கர்ப்பம் தரிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு குழந்தைப் பேறுக்காகவும், வளர்ப்புச் செலவுக்காகவும் அரசு சார்பில் 1,00,000 ரூபிள்கள்... மேலும் பார்க்க

``நாங்கள் கூட்டணி அமைத்தால் மட்டும் பாஜக மதவாத கட்சியா?'' - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

"மிசாவில் உங்களை கைது செய்தவர்களுடன் நீங்கள் கூட்டணி வைக்கலாம்.. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு" என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னி... மேலும் பார்க்க

'நான் யாருன்னு தெரியல?' - திடீரென விசாரித்த அமைச்சர்... தெரியாமல் விழித்த அரசு பேருந்து ஊழியர்கள்

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகளில் அவ்வப்போது திடீரென்று ஆய்வு செய்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்து வருவதை தனது அலுவல்களில் ஒன்றாக வைத்துள்ளார். அந்த வகையில், கோவையில் உள்ள கொடீச... மேலும் பார்க்க

'முருகர் மாநாட்டை நடத்திய பெருமை எங்களுக்கே உண்டு!' - அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!

'திருச்செந்தூர் குடமுழுக்கு!'திருச்செந்தூர் முருகன் கோயிலின் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடந்து முடிந்திருக்கிறது. குடமுழுக்கு முடிந்த பிறகு அமைச்சர் சேகர் பாபு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப... மேலும் பார்க்க

இறைவனை கூட பார்க்க முடியவில்லை; 2000 ஆண்டு கால பிரச்னை இது- முருகர் கோயிலில் செல்வப்பெருந்தகை வேதனை!

ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள வல்லக்கோடை முருகன் கோயிலின் குடமுழுக்கு நிகழ்வு ஒன்றில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.செல்வப்பெருந்தகைமூலவர... மேலும் பார்க்க

நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன்... ரேஸில் பெண் தலைவர்கள்; பாஜகவின் அடுத்த தேசியத் தலைவர் யார்?

பாஜக தேசியத் தலைவருக்கான தேர்வு விரைவில் நடக்க உள்ளது.2020-ம் ஆண்டு பாஜக-வின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெ.பி.நட்டா. இவரின் பதவிக்காலம் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதமே முடிந்துவிட்டது. ஆனால்,... மேலும் பார்க்க