Ayyanar Thunai: மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிய நிலா, சோழனின் காதல் கதை என்னவாகும்?
அய்யனார் துணை சீரியலில் நேற்றைய எபிசோடில் நிலா சோழனின் வீட்டை விட்டு வெளியேறுகிறார். சேரனின் நல்ல மனதிற்காக நிலா ரிசப்ஷனுக்கு சம்மதிக்கிறார். அதே சமயம் சேரனிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடுகிறார்.
மறுநாள் காலை சேரன் சோழனிடம் நிலா பற்றிய உண்மைகளை மறைத்தது ஏன் எனக் கேட்கிறார். வழக்கம் போல சோழன் சமாளிக்கிறார். தனக்கு நிலா மீது காதல் இருப்பதையும், நிலாவுடன் சேர்ந்த வாழ நினைப்பதையும் சோழன் சொல்கிறார்.

நிலா இது நிஜக் கல்யாணம் இல்லை, இங்கிருந்து சென்று விடுவேன் என்று சொல்ல, சோழன் அதற்கு நேரெதிராக ஒரு நிலாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என சொல்கிறார். இதை கேட்டு சேரன் செய்வதறியாமல் தவிக்கிறார். தம்பியின் வாழ்க்கை என்னாவது , அந்த பெண்ணின் வாழ்க்கை என்னாவது என நினைத்து வருந்துகிறார். நாளுக்கு நாள் சேரனின் கதாபாத்திரம் மெருகேறி வருகிறது.
நடேசன் காலையில் தூங்கி எழுந்ததுமே சிகரெட் பிடிக்கிறார். அவரின் செய்கைகளை பார்த்து நிலா கடுப்பாகிறார். இவர் மாதிரியான ஆள்கள் இருக்கும் இடத்தில் நாம் சேர்ந்து வாழவே முடியாது என மனதில் நினைத்துக் கொள்கிறார்.
நடேசன் சீரியலில் பெரும்பாலும் சிகரெட் பிடிப்பதும், மது அருந்துவதுமாகவே காட்டப்படுகிறது. இந்த காட்சிகளை கொஞ்சம் தவிர்க்கலாம். காரணம் சீரியல்களை சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரும் பார்க்கின்றனர்.

சேரன் நிலாவிடம் உங்க விருப்பப்படி நீங்க எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் தான், நீங்க இங்கேயே இருந்தாலும் எனக்கு சந்தோஷம் தான் என்று சொல்கிறார். நிலா தீர்க்கமாக இங்கு இருக்கவே முடியாது என்று கூறிவிடுகிறார்.
நிலா தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு ஹாஸ்டல் பார்க்கலாம் என்று கிளம்புகிறார். சோழனும் நிலாவின் வற்புறுத்தலால் விடுதியில் சேர்க்க அழைத்துச் செல்கிறார். சோழன் பல இடங்களில் சுயநலமாக நடந்துக் கொள்கிறார். நிலாவின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் தன்னுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
அதே சமயம் நிலா தனக்கு உதவி செய்த குடும்பம் என்றும் பாராமல் அவர்களின் வீட்டை அறுவறுப்பாகப் பார்க்கிறார். சேரனின் நல்ல மனதை தவிர அந்த வீட்டில் அனைத்தையும் வெறுக்கிறார். எப்படியாவது இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என நினைக்கிறார்.
சமீபத்தில் வெளியான ப்ரோமோவில் நிலா நினைத்தது போன்று மகளிர் விடுதியில் சேர முடியவில்லை. அவரின் ஐடி ஃப்ரூஃப் எதுவும் அவரிடம் இல்லை. எனவே விடுதியில் அவரை சேர்க்க மறுக்கின்றனர். சோழனிடம் நிலாவின் ஐடி ப்ரூஃப் மொபைலில் இருக்கிறது. ஆனால் அந்த விஷயத்தை மறைத்து விடுகிறார். எனவே நிலாவுக்கு வேறு வழியில்லை, சோழன் வீட்டில் தான் தங்க வேண்டும்.
நிலா சோழனின் காதலை புரிந்துக் கொள்வாரா? வீட்டில் சூழலை மாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
Vikatan Play
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/MaperumSabaithanil
