செய்திகள் :

Champions Trophy: முதல் ஆட்டத்திலேயே காயம்... தொடரிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் அதிரடி வீரர்!

post image

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. முதல் போட்டியே நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கும், முன்னாள் சாம்பியன் நியூசிலாந்துக்கு நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் வில் யங், டாம் லதம் ஆகியோர் சதமடித்திருந்தனர்.

ஃபக்கர் ஜமான்

அதைத் தொடர்ந்து, 321 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48-வது ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி, இந்தத் தோல்வியால் நாளை மறுநாள் இந்தியாவுடன் மோதும் போட்டியில் வென்றால்தான் செமி பைனலுக்கு செல்ல முடியும் என்ற நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் அதிரடி வீரரான ஃபக்கர் ஜமான் காயம் காரணமாக சாம்பியன்ஸ் தொடரிலிருந்து விலகியிருக்கிறார்.

நியூசிலாந்துடனான போட்டியில் ஃபீல்டிங்கின்போது ஏற்பட்ட காயத்தால் ஃபக்கர் ஜமான் விலகியிருக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் ஃபக்கர் ஜமான். ``இதுபோன்ற மிகப்பெரிய தளத்தில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்துவது இந்நாட்டின் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவு. அவ்வாறு பாகிஸ்தானை பிரதிநித்துவம் செய்யும் பாக்கியம் எனக்குப் பலமுறை கிடைத்திருக்கிறது.

இருப்பினும், துரதிஷ்டவசமாக சாம்பியின்ஸ் டிராபியிலிருந்து விலகிவிட்டேன். நிச்சயம் அல்லாஹ் சிறந்த திட்டம் வைத்திருப்பார். இது தொடக்கம்தான், கண்டிப்பாக வலுவாக கம்பேக் கொடுப்பேன்." என்று பதிவிட்டிருக்கிறார். ஃபக்கர் ஜமானுக்குப் பதில் மாற்று வீரராக, இமாம் உல் ஹக்கை பாகிஸ்தான் அணி தேர்வு செய்திருக்கிறது. கடைசியாக, 2017-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கெதிராக சதமடித்து, பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

IND vs PAK: "இந்தியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் வெல்ல வேண்டும்" - முன்னாள் இந்திய வீரர் சொல்வதென்ன?

ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும்) நடைபெற்று வருகிறது. A பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், பங்களாதேஷ், முன்னாள் சாம்பியன்கள் இந்தியா (2)... மேலும் பார்க்க

SA vs AFG: பௌலிங்கில் கோட்டைவிட்ட ஆப்கானிஸ்தான்; எளிதில் வென்ற தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமாதான் டாஸை வென்றிருந்தார். முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார்.அதன்படி பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 315 ரன்களை எடுத்திருந்தது. தென்னாப்... மேலும் பார்க்க

Kerala: மேட்சை காப்பாற்றிய ஹெல்மெட்... ரஞ்சி வரலாற்றில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறிய கேரளா

நடப்பு ரஞ்சி டிராபி தொடர் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. பிப்ரவரி 26-ம் ரஞ்சி டிராபி பைனல் தேதி நடக்கவிருக்கிறது. இதனை முன்னிட்டு, பிப்ரவரி 17-ம் தேதி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. ஒன்றில், விதர்பாவு... மேலும் பார்க்க

Dhoni: `மன்னிக்கப் பழகுங்கள்; கடந்து செல்லுங்கள், அது வாழ்க்கையில்..!' - தோனி சொல்லும் அட்வைஸ்

தோனி, கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன.இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 ... மேலும் பார்க்க

Mohammed Shami: ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள்... அகர்கார், ஜாகீர் கானை தனித்தனியே முந்திய ஷமி!

சாம்பியன்ஸ் டிராபியில் பங்களாதேஷுக்கு எதிரான இன்றைய போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், இரண்டு சாதனைகளைப் படைத்திருக்கிறார்.சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியத... மேலும் பார்க்க

Champions Trophy: அர்ஷ்தீப் சிங்குக்கு பதில் ஹர்ஷித் ராணா - ரசிகர்கள் அதிருப்தி ஏன்?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கான முதல் போட்டி தொடங்கியிருக்கிறது. இதில் தேர்வு செய்யப்பட்டுள்ள 11 பேர் கொண்ட அணி குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுநர்களும் த... மேலும் பார்க்க