செய்திகள் :

Chhattisgarh : சுதந்திரத்துக்குப் பின் முதன்முறையாக மின்சாரம் பெற்ற கிராமம் - அரசு சொல்வது என்ன?

post image

சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தீஸ்கர் மாநிலத்தின் கிராமத்துக்கு மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் அமித் ஷாவின் சூளுரை

``பிரதமர் மோடி அரசு நக்சலைட்டுகளுக்கு எதிராக இரக்கமற்ற அணுகுமுறைகளைக் கடைபிடித்து வருகிறது. சரணடைதல் தொடங்கி என்கவுண்டர் வரை தொடர்ந்து மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மையை பின்பற்றி வருகிறோம். மார்ச் 31, 2026-க்குள் நாடு நக்சல் இல்லாததாக நாடாக இருக்கும்" என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

முதல்முறையாக மின்சாரம் பெறும் கிராமம்

அதன் அடிப்படையில் சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இதுவரை 113 நக்சலைட்டுகள் தனித்தனி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பீஜாப்பூர் உட்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் பிரிவில் மட்டும் 97 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டிலிருந்து பல்வேறு கிராமங்கள் மீட்கப்பட்டு, அந்தப் பகுதியில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்கிறது அரசு தரப்பு.

மீட்கப்பட்ட கிராமங்கள்

அதன் ஒருபகுதியாக மாவோயிஸ்ட்களின் ஆளுகைக்குக் கீழ் இருந்த பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான டைம்னாரில் முதல்முறையாக மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக சத்தீஸ்கர் அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``பைராம்கர் மேம்பாட்டுத் தொகுதியில் உள்ள பெச்சபால் கிராம பஞ்சாயத்தின் விரிவாக்க கிராமத்தில் உள்ள 53 வீடுகளும், முதல்வரின் மஞ்ச்ரா-டோலா மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது. 77 ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக அந்த கிராமம் மின்மயமாக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

`எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை!' - அதிமுக, பாஜக கூட்டணி கேள்விக்கு அண்ணாமலை பதில்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள்களுக்கு முன்பு திடீரென டெல்லிக்கு விசிட் அடித்து, பாஜக-வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்திலேயே நேரில் சந்தித்து, 45 நிமிட... மேலும் பார்க்க

TVK: டார்கெட் 'கருணாநிதி' குடும்பம்; பெண் வாக்காளர்களுக்கு குறி - பொதுக்குழுவில் போடப்பட்ட ஸ்கெட்ச்

'தவெகவின் முதல் பொதுக்குழு!'தவெகவின் முதல் பொதுக்குழுக் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. நிகழ்வின் ஒவ்வொரு பேச்சையும் உடைத்துப் பார்த்தால் நிறையவே அரசியல் செய்திகளை உள்ளடக்கி வைத்திருக்கிறார்கள். திம... மேலும் பார்க்க

அமித் ஷா vs கனிமொழி: தமிழ் அகதிகள் பற்றி திமுக பேசவில்லையா? - வீடியோவுடன் பதிலளித்த கனிமொழி!

நாடாளுமன்றத்தில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025-ன் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த மசோதவின் முக்கியத்துவம் மற்றும் பலன்கள் குறித்து பேசிய அமித் ஷா, அகதிகளுக்கென்று தனி சட்டம் தேவையில்லை... மேலும் பார்க்க

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மம்தாவுக்கு எதிராக கோஷமிட்ட மாணவர்கள்! - என்ன நடந்தது?

லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கெல்லாக் கல்லூரியில் (Kellogg College) உரையாற்றியிருக்கிறார். அப்போது, லண்டனில் உள்ள இந்... மேலும் பார்க்க

TVK : தவெக தலைவர் விஜய்க்கு பெற்றோரின் வாழ்த்து - முதல் பொதுக்குழு கூட்டம் | Photo Album

தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய்தவெக தலைவர் விஜய் மேலும் பார்க்க

தவெக விஜய்: "2026-ல் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்ட வைக்கிறார்கள்; ஆனால்..." - கொந்தளித்த ஆனந்த்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், முதல் பொதுக்குழுக் கூட்டத்தைத் திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திவருகிறது. இந்தக் கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய், பொதுச... மேலும் பார்க்க