செய்திகள் :

Dhoni: "ருத்துராஜைப் பெயருக்குத்தான் கேப்டனாக வைத்திருக்கிறோமா?" - விமர்சனங்களுக்குத் தோனி பதில்

post image

ஐ.பி.எல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், அதை ஒளிபரப்பும் JioStar நிறுவனத்துக்குத் தோனி பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

அதில், ருத்துராஜூக்குப் பதில் தோனிதான் கேப்டன்சி செய்கிறார். ருத்துராஜ் பெயருக்குத்தான் கேப்டனாக இருக்கிறார் எனும் விமர்சனங்களுக்குத் தோனி பதில் கூறியிருக்கிறார்.

தோனி - ருத்துராஜ்
தோனி, ருத்துராஜ்

தோனி பேசியிருப்பதாவது, "2023-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் முடிந்தவுடனே ‘அடுத்த சீசன் நீங்கள் கேப்டனாக இருக்க 90 சதவீதம் வாய்ப்பிருக்கிறது. அதற்கு ஏற்றவாறு தயாராகிக்கொள்ளுங்கள்’ என்று கூறினேன்.

ருத்து எங்களுடன் சில வருடங்களாக இருக்கிறார். மேலும், நிதானமாகப் பதற்றப்படாமல் செயல்படக் கூடியவர்.

அதனால்தான், அவருக்கு கேப்டன்சி வாய்ப்பைக் கொடுத்தோம். எல்லாரும் கேப்டன்சி செய்துவிட முடியாது.

நாங்கள் அவருக்கு ஒரு வாய்ப்பைத்தான் கொடுத்துள்ளோம். அவர்தான் அவரை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

கடந்த சீசனில் ‘ருத்துராஜை வெறும் பேருக்குப் புதுக்கேப்டனாக அறிவித்துவிட்டு தோனிதான் களத்தில் கேப்டனாக செயல்படுகிறார்’ போன்ற விமர்சனங்களை நான் பார்த்தேன்.

ஆனால், எந்த பவுலரை உபயோகப்படுத்த வேண்டும், எப்படி ஃபீல்டிங் செட் செய்ய வேண்டும் என்பதெல்லாம் அவரேதான் முடிவெடுத்தார்.

Ruturaj
Ruturaj

நான் விக்கெட் கீப்பர் என்பதால், அந்த ஃபீல்டர் சற்று முன்னே இருக்க வேண்டுமா அல்லது தள்ளி நிற்க வேண்டுமா எந்த இடத்திலிருந்தால் சரியாக இருக்கும் எனச் சொல்லுவேன் அவ்வளவுதான்" எனக் கூறியிருக்கிறார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Sai Kishore: 'ஹர்திக் என் நண்பர்தான் ஆனாலும்...' - களத்தில் முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்

'முறைத்துக் கொண்ட ஹர்திக் - சாய் கிஷோர்!'அஹமதாபாத் மைதானத்தில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோற்றிருக்கிறது. இலக்கை விரட்டிய மும்பை அணி மிக மோசமாக பேட்டிங் ஆடி ... மேலும் பார்க்க

Dhoni: `தோனியிடம் இதைச் சொல்ல CSK பயிற்சியாளர்களுக்கு தைரியம் இல்லை’ - இந்திய முன்னாள் வீரர் பளீச்

ஐபிஎல் ரசிகர்களின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய போட்டிகளில் ஒன்றான சி.எஸ்.கே vs ஆர்.சி.பி போட்டி சேப்பாக்கத்தில் நேற்று (மார்ச் 28) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சி.எஸ்.கே கேப்டன் ருத்துராஜ் முதலில் ப... மேலும் பார்க்க

CSK vs RCB: `சேப்பாக்கத்தில் ஹோம் க்ரவுண்ட் சாதகம் இல்லவே இல்லை’ - தோல்விக்குப் பின் ஃப்ளெமிங்

ஐபிஎல் 2025-ல் நேற்று நடந்த சி.எஸ்.கே vs ஆர்.சி.பி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தியுள்ளது பெங்களூரு அணி. இந்த நிலையில் தங்களுக்கு... மேலும் பார்க்க

Dhoni : `இக்கட்டான நேரத்தில் களத்திற்கு வராத `பேட்ஸ்மேன்' தோனி!' - சென்னை அணிக்குத் தேவைதானா?

'இக்கட்டான சூழலில் இறஙகாத தோனி!'சேப்பாக்கத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோற்றிருக்கிறது. தோல்வியை விட அவர்கள் தோற்றவிதம்தான் வேதனையானது. போராடும் குணமே இல்லாமல் மந்தமாக ஆடி வீழ்... மேலும் பார்க்க

CSK vs RCB : 'டார்கெட் மட்டும் 170 க்குள்ள இருந்திருந்தா கதையே வேற' தோல்விக்குப் பின் ருத்துராஜ்

'சென்னை தோல்வி!'சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டியில் பெங்களுரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. 17 ஆண்டுகள் கழித்து சேப்பாக்கத்தில் சென்னை ... மேலும் பார்க்க

CSK vs RCB: `என்ன ஆச்சு CSK?' தோல்விக்கான அந்த 3 காரணங்கள்

'பெங்களூரு வெற்றி!'அனில் கும்ப்ளே தலைமையிலான பெங்களூரு அணி 2008 இல் சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தியிருந்தது. அதன்பிறகு, இத்தனை ஆண்டுகளில் சேப்பாக்கத்தில் பெங்களூரு அணி சென்னையை வீழ்த்தியதே இல்ல... மேலும் பார்க்க