செய்திகள் :

Dhoni: "CSK ரசிகர்களிடம் தோனி இதைச் சொல்ல வேண்டும்" - சென்னை அணியின் முன்னாள் வீரர் ஓப்பன் டாக்

post image

ஐபிஎல் இன்றைய (மார்ச் 28) போட்டியில் ருத்துராஜ் தலைமையிலான சி.எஸ்.கே அணியும், பட்டிதார் தலைமையிலான ஆர்.சி.பி அணியும் சேப்பாக்கத்தில் மோதுகின்றன. கடந்த சீசனில், சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ஆர்.சி.பி-யிடம் தோற்றதால் சி.எஸ்.கே-வால் பிளேஆஃப் சுற்றுக்கு முடியாமல் போனது.

ஆனால், அதைவிட அப்போட்டியில் தோற்ற பிறகு மைதானத்தில் ஆர்.சி.பி வீரர்களும், மைதானத்துக்கு வெளியே ஆர்.சி.பி ரசிகர்களும் செய்த செயலுக்கு, இன்று சரியான பதிலடி கிடைக்கும் என சி.எஸ்.கே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தோனி
தோனி

அதேசமயம், சி.எஸ்.கே-வின் வெற்றி, தோல்வியைக் கடந்து தோனி களமிறங்கினால் போதும், தோனி பேட்டிங் செய்தால்போதும், தோனி சிக்ஸ் அடித்தால்போதும் என்று ஒரு கூட்டம் ஆரவாரம் செய்கிறது.

இந்த நிலையில், சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு, சி.எஸ்.கே ரசிகர்கள் அனைவரும் முதலில் தோனி ரசிகர்கள் என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

`தல' என்று சரியாகத்தான் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது!

ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் தோனி மீதான ரசிகர்களின் இத்தகைய ஆதரவு குறித்துப் பேசிய அம்பத்தி ராயுடு, ``இது மிகவும் விசித்திரமானது. ஆனால், விளையாட்டுக்கு இது நல்லதென்று நான் நினைக்கவில்லை. நீங்கள் புதியவராக இருந்தால் இது உங்களை அச்சுறுத்தும்.

இருப்பினும், இத்தகைய ஆதரவு மிகவும் அபாரமானது. நீங்கள் அங்கு விளையாடும்போது, சி.எஸ்.கே ரசிகர்கள் அனைவரும் முதலில் தோனி ரசிகர்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

தோனி, அம்பத்தி ராயுடு
தோனி, அம்பத்தி ராயுடு

இது மிகத் தெளிவாக இருக்கிறது. அது சரியானதும்கூட. ஏனெனில், பல ஆண்டுகளாக அணி அவ்வாறு அமைக்கப்பட்டுக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. `தல' என்று அவருக்கு சரியாகத்தான் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

சி.எஸ்.கே-வுக்காக அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை ரசிகர்கள் கண்மூடித்தனமாகப் பிரமிப்பாகப் பார்த்து நேசிக்கும் நிலை வந்திருக்கிறது." என்று கூறினார்.

தோனி நினைத்தால் சரி செய்யலாம்!

மேலும், கடந்த சில ஆண்டுகளாக தோனி பேட்டிங் செய்ய வரவேண்டும் என்பதற்காகச் சொந்த அணி வீரர்கள் அவுட்டாவதையே சி.எஸ்.கே ரசிகர்கள் ஆரவாரம் செய்வது பற்றி பேசிய அம்பத்தி ராயுடு, ``கடந்த சில ஆண்டுகளாக இது நடக்கிறது. சில வீரர்கள் அதை உணர்ந்திருக்கிறார்கள்.

வெளிப்படையாக யாரும் சொல்லவில்லை என்றாலும், நிறைய பேர் களத்தில் உணர்கின்றனர். தோனியை நேசிக்கும் ரசிகர்களும், நாமும் கூடவே அவர் பேட்டிங் செய்வதைக் காண விரும்புகிறோம்.

தோனி
தோனி

ஆனால், ஒருவர் பேட்டிங் செய்யச் செல்லும்போது கூட்டத்திலிருந்து கத்துகிறார்கள். உண்மையில், அந்த வீரர் அவுட்டாக வேண்டும் என்கிறார்கள். அவர் அவுட்டாவதை எதிர்பார்க்கிறார்கள்.

இதை தோனியால் மட்டும்தான் சரிசெய்ய முடியும். `அவர்கள் நம் வீரர்கள். நான் பேட்டிங் செய்வதைப் போல, மிடில் ஆர்டரில் அவர்கள் பேட்டிங் செய்கிறார்கள்' என்று தோனி சொன்னால்தான், கூட்டத்தை அமைதிப்படுத்த முடியும். வீரர்களுக்கும் அது நல்லதாக அமையும்" என்று கூறினார்.

Dhoni: "தோனிக்கெதிராக இவ்வாறு செய்யக் கூடாது; அவர் ஒய்வுபெற்றால்..." - கெயில் கூறுவது என்ன?

ஆர்.சி.பி-க்கெதிரான போட்டியில் 13 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து வெற்றிக்கு 100+ ரன்கள் தேவை என்று சிஎஸ்கே தத்தளித்த நேரத்தில், தோனி இறங்காமல் அஸ்வின் இறக்கப்பட்டது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய விவ... மேலும் பார்க்க

CSK vs DC: "தயவுசெய்து இவரை மட்டும் ப்ளேயிங் 11இல் எடுக்காதீர்கள்" - சிஎஸ்கே-க்கு ஹர்பஜன் வார்னிங்

ஐ.பி.எல்-இல் இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் வெற்றிபெற்ற சி.எஸ்.கே அணி,... மேலும் பார்க்க

MI vs KKR: "அஸ்வனி குமாரின் அந்த விக்கெட் மிக முக்கியமானது" - வெற்றிக்குப் பின்னர் ஹர்திக் பாண்டியா

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதல... மேலும் பார்க்க

MI vs KKR: `எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம்' - விளக்கும் கொல்கத்தா கேப்டன் ரஹானே

கொல்கத்தா அணிக்கும் மும்பை அணிக்கும் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த மும்பை அணி, 16.2 ஓவர்களில் ... மேலும் பார்க்க

Ashwani Kumar: பஞ்சாப் தவறவிட்ட மாணிக்கம்; பட்டை தீட்டிய பல்தான்ஸ்; யார் இந்த அஸ்வனி குமார்?

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎ... மேலும் பார்க்க

Ashwani Kumar: "கடின உழைப்பால் இங்கு நிற்கிறேன்" - MI vs KKR போட்டி ஆட்டநாயகன் அஸ்வனி குமார்

மும்பை vs கொல்கத்தா ஐபிஎல் போட்டி வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்றது. இதில், டாஸ் வெனறு பவுலிங்கைத் தேர்வு செய்த ஹர்திக் பாண்டியா & கோ, கொல்கத்தாவை 16.2 ஓவர்களில் 116 ரன்களுக்குச்... மேலும் பார்க்க