செய்திகள் :

Doctor Vikatan: நெஞ்சு கரித்தல், எதுக்களித்தல் பிரச்னை; செரிமான மருந்துதான் ஒரே தீர்வா?

post image

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக சாப்பிட்டதும் நெஞ்சு கரித்தல் பிரச்னையும், உணவு எதுக்களித்தல் பிரச்னையும் இருக்கிறது.

பல காலமாக இதற்கு ஆண்டாசிட் சிரப் அல்லது மாத்திரை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.  இதைத் தவிர்த்து, இயற்கையான முறையில் இந்தப் பிரச்னை சரியாக ஏதேனும் தீர்விருந்தால் சொல்லவும்.

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர், மூலிகைமணி அபிராமி

சித்த மருத்துவர் அபிராமி

நெஞ்சு கரித்தல் மற்றும் எதுக்களித்தல் பிரச்னைக்கான முக்கிய காரணம், இரவில் தாமதமாகச் சாப்பிடுவது.  அடுத்து அதிக காபி, டீ குடிப்பவர்களுக்கும் இந்த இரண்டு பிரச்னைகளும் இருக்கும்.

வயிற்றில் சுரக்கும் அமிலமானது அதிகரிக்கும்போது, நம் உணவுக்குழலுக்குள் உள்ள எலாஸ்டிக் மாதிரியான வால்வு பகுதியைச் சேதப்படுத்துவதால், அமிலமானது மேலே ஏற ஆரம்பிக்கும்.

'ஆசிட் ரெஃப்ளெக்ஸ்' எனப்படும் இந்தப் பிரச்னையில், வறட்டு இருமல் வரும். இரவுத் தூக்கம் பாதிக்கப்படும். எனவே, இந்தப் பிரச்னை வராமலிருக்க, இரவில் சீக்கிரமே சாப்பிட்டு விட வேண்டும். 

உணவில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என அறுசுவைகளும் சம அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 

நெஞ்சு கரித்தல் பிரச்னைக்கு அற்புதமான மருந்து சீரகம்.  அகத்தை சீராக வைப்பதுதான் சீரகம்.  100 கிராம் அளவு சீரகத்தை எடுத்து, அது மூழ்கும் அளவுக்கு எலுமிச்சைப்பழச் சாற்றில் ஊற வைக்கவும். 

இதை இரண்டு நாள்கள் வெயிலில் காய வைக்கவும். சீரகம் எலுமிச்சைப்பழச் சாறு முழுவதையும் இழுத்துக்கொண்டிருக்கும். இப்படிச் செய்கிற சீரகத்துக்கு 'பாவனை சீரகம்' என்று பெயர்.

பாவனை செய்வது என்றால் ஊறவைப்பது.  எலுமிச்சைப் பழச்சாற்றில் ஊற வைத்த சீரகத்தைப் பொடித்துக்கொள்ளவும்.

இத்துடன் சம அளவு நாட்டுச் சர்க்கரை கலந்து ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ளவும். எப்போதெல்லாம் நெஞ்சு கரிக்கிறதோ, அப்போதெல்லாம் இந்தப் பொடியில் சிறிதளவு எடுத்து வாயில் போட்டுக்கொண்டால், உமிழ்நீர் நன்கு சுரக்கும்.  அப்படிச் சுரக்கும்போதே  நெஞ்சு கரித்தல்,  அசிடிட்டி போன்ற பிரச்னைகள் சரியாகிவிடும். 

சீரகம்

சீரகத்தை ஊறவைத்துப் பொடித்து, இப்படியெல்லாம் செய்ய நேரமில்லை என்றால், சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஏலாதி சூரணத்தைப் பயன்படுத்தலாம். 

ஏலாதி என்றால், ஏலக்காயை ஆதியாக, அதாவது முதல் மருந்தாக வைத்துச் செய்யப்பட்ட சூரணம். சுக்கு, மிளகு போன்றவை சேர்த்துத் தயாரிக்கப்பட்ட மிகப் பாதுகாப்பான சித்த மருந்து இது.

இந்தச் சூரணத்தில் அரை  டீஸ்பூன் அளவு வாயில் போட்டுக் கொண்டு, இளம் சூடான நீர் குடித்துவிட்டால், அசிடிட்டி உடனே சரியாகிவிடும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

``அரசியலுக்கு வரும் புது முகங்கள் எல்லோரும் MGR வாரிசு என்கிறார்கள்'' - செல்லூர் ராஜூ

"தமிழக அரசியலில் எத்தனை பேர்தான் தன்னை எம்ஜிஆர் என சொல்வார்கள் எனத்தெரியவில்லை" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.செல்லூர் ராஜூகடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பாஜக, ... மேலும் பார்க்க

``நாங்கள் வெற்றி பெற ஜம்மு & காஷ்மீரில் இருந்து கூட மக்களை அழைத்து வருவோம்'' - கேரளா பாஜக தலைவர்

ஏற்கெனவே பாஜக அரசின் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் வாக்காளர்களை நீக்குகிறார்கள், அவர்களுக்கு தேவையான வாக்காளர்களைச் சேர்க்கிறார்கள் என்று ஏகப்பட்ட புகார்கள் எழுந்துகொண்டிருக்கிறது. இதை எதிர்த்து ப... மேலும் பார்க்க

``வாக்குத் திருட்டைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை'' - பிரதமர் மோடியை சாடிய ராகுல் காந்தி

"வாக்காளர் பட்டியலில் மோசடி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டன" ஆகிய குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகாரில் 16 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க

``விஜய் இத்தனை லட்சம் பேரைத் திரட்டி வெறும் சவடால்களை மட்டுமே அடித்திருக்கிறார்'' - திருமாவளவன்

த.வெ.க மாநாடு, தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வருகை, அதிமுகவின் மீதான திமுகவின் விமர்சனம் குறித்து நேற்று விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.த.வெ.க மாநாடு"தமிழக வெற்ற... மேலும் பார்க்க

``தலைவர்கள் இப்படி இருந்தால், ஊழலை எதிர்த்து எப்படி போராட முடியும்?'' - பிரதமர் மோடி

பதவி நீக்க மசோதாபிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர் ஆகியோர் கடுமையான குற்றங்களில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்டு, 30 சிறையில் இருந்தால் அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை கடந்த 20-ம் தேதி... மேலும் பார்க்க

Health: `பந்திக்கு முந்து' என்று சொன்னதில் இப்படியொரு ரகசியம் இருக்கா?

உணவு சூடாக இருக்கையில் சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது என்கிற சித்த மருத்துவர் செல்வ சண்முகம், தினமும் இருவேளை சூடாக சாப்பிடுவதற்கான வழிமுறைகளையும், 'பந்திக்கு முந்து' என்கிற பழமொழியின் பின்னணியில... மேலும் பார்க்க