செய்திகள் :

``FIR போட்டு ஜெயில்ல வேணாலும் அடைங்க!'' - தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் உண்ணாவிரதம்; மீண்டும் கைது

post image

சென்னை சென்ட்ரல் அல்லிக்குளம் அருகே இன்று காலை முதல் பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயத்தை எதிர்த்தும் 13 தூய்மைப் பணியாளர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியிருந்தனர்.

அவர்களை பெரியமேடு காவல்துறையினர் இப்போது கைது செய்திருக்கின்றனர்.

கொருக்குப்பேட்டை
கொருக்குப்பேட்டை

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, மண்டலங்கள் 5, 6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் போராடியவர்களை ஆகஸ்ட் 13ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்தனர். ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தனியார்மயத்துக்கு எதிராக, தூய்மைப் பணியாளர்கள் சார்பில் உழைப்போர் உரிமை இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியன்று சிந்தாதிரிப்பேட்டையின் மே தினப் பூங்காவில் அடுத்த கட்ட போராட்டத்தை பற்றி ஆலோசிக்க சுமார் 300 பெண் தூய்மைப் பணியாளர்கள் கூடினர்.

அங்கு கூடிய தூய்மைப் பணியாளர்களையும் காவல்துறையினர் கூண்டோடு கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

சமூகநலக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள்
சமூகநலக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள்

இதைத்தொடர்ந்து, நேற்று சென்னை கொருக்குப்பேட்டை, இந்திரா நகரில் 13 பெண் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் வீட்டருகேயே பணி நிரந்தரம் வேண்டி உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

உடனடியாக அந்தப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, அந்தப் பெண்களையும், அவர்களுக்கு ஆதரவாக நின்ற தூய்மைப் பணியாளர்களையும் கைது செய்து சமூக நலக்கூடத்தில் வைத்திருந்தனர். நேற்று இரவு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று காலையில் சென்னை சென்ட்ரல் அல்லிக்குளம் அருகே 13 பெண் தூய்மைப் பணியாளர்கள் ஒன்றாக அமர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினர்.

விஷயம் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியமேடு காவல்துறையினர், போராட்டத்தை தொடங்கிய 1 மணி நேரத்திலேயே அவர்களை கைது செய்து, புரசைவாக்கத்திலுள்ள சமூக நலக்கூடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அல்லிக்குளம் அருகே போராடிய தூய்மைப் பணியாளர்கள்
அல்லிக்குளம் அருகே போராடிய தூய்மைப் பணியாளர்கள்

“முதலமைச்சர், எங்களுக்கு எதாச்சு நல்லது பண்ணணும்னு நினைச்சா, எங்க வேலையை திரும்ப கொடுங்க. 2 மாதமாக நாங்க எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கோம். இல்லன்னா எங்க மேல வழக்குப்பதிவு செஞ்சு ஜெயில் அடைங்க” என கைதான பெண் தூய்மைப் பணியாளர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு என்ன செய்தி?

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வரலாற்றில் யாரும் பெற்றிடாத அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றவர் ஜெகதீப் தன்கர்.2022-ல் நடைபெற்ற தேர்தலில், பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஜெகதீ... மேலும் பார்க்க

அசைன்மென்ட் கொடுத்த அமித் ஷா; கலகத்தை ஆரம்பித்த செங்கோட்டையன்! - எடப்பாடி அவுட்... வேலுமணி இன்!

''ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம், கூவத்தூர் கூத்துகள் எல்லாம் வெடித்த காலத்தில், 'முதலமைச்சர் ரேஸில்' செங்கோட்டையன் பெயர்தான் முதலில் இருந்தது. அதற்கு முட்டுக... மேலும் பார்க்க

NDA: Sengottaiyan - Amit Shah - Thambidurai - முக்கோண சந்திப்பின் பின்னணி? ADMK TVK | Imperfect Show

* நேபாளத்தில் வெடித்த GEN Z போராட்டம் - பின்னணி என்ன?* நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா!* இந்தியாவின் அடுத்த குடியரசுத் துணை தலைவர் யார்? - இன்று வாக்குப்பதிவு* இளையராஜா எம்.பி.யுடன் சி.பி.ராதாக... மேலும் பார்க்க

Sudan Gurung: நேபாளத்தில் போராடும் Gen Z-களின் தலைவராகப் பார்க்கப்படும் இவர் யார்?

சமூக வலைத்தளங்கள் முடக்கம்நேபாளம் நாட்டில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி சமூக வலைத்தளங்கள் முடக்கம், இளைஞர்களை மிகப் பெரிய போராட்டத்துக்கு தூண்டியது. இதுவரை அரசின் நடவடிக்கையால் போராட்டக்காரர்கள் 300 பேர... மேலும் பார்க்க

``2026 தேர்தலில் ஒரு மேஜிக் செய்யப் போகிறோம்; அது நம்மை வெற்றி பெற வைக்கும்'' - பிரேமலதா விஜயகாந்த்

தஞ்சாவூரில், தே.மு.தி.க பூத் கமிட்டி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட, தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் ப... மேலும் பார்க்க