செய்திகள் :

Golden Temple: 54 வருடங்களுக்கு பிறகு அணைக்கப்பட்ட பொற்கோயிலின் விளக்குகள்: காரணம் கூறும் நிர்வாகி!

post image

அமிர்தசரஸ் பொற்கோயில் (Sri Harmandir Sahib) பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள சீக்கியர்களின் மிக முக்கியமான புனிதத் தலமாகும். இக்கோயில், "பொற்கோயில்" எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. இது 1577-ம் ஆண்டில் சீக்கிய நான்காவது குருவான குரு ராம் தாஸ் அவர்களால் நிறுவப்பட்டது.

Golden Temple
Golden Temple

தற்போது சிறப்பு உயர் தொழில்நுட்ப விளக்கு அமைப்புடன் கூடிய பொற்கோயிலில் நிரந்தர ஒளிரும் விளக்குகள் உலகளவில் போற்றப்படுகின்றன. இந்தக் கோயில் உருவாக்கப்பட்டத்திலிருந்து விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர, ஒருபோதும் விளக்குகள் அணையாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 10.30 முதல் 11.00 மணிவரை விளக்குகள் அணைக்கப்பட்டன.

இந்தியா பாகிஸ்தான் இடையே தொடரும் பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு, ஒவ்வோரு மாநில அரசுகளும் போர் ஒத்திகையை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், இந்தியாவின் பிரசித்திப்பெற்ற பொற்கோயிலில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் 'ரெஹத் மரியாதா' (சீக்கிய நடத்தை விதிகள்) கருத்தில் கொண்டு, கருவறை மற்றும் ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பின் 'பர்காஷ்' விழா தொடங்கப்பட்ட இடங்கள் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் இந்த ஒத்திகையின் அடிப்படையில் மின்தடை அமல்படுத்தப்பட்டது.

Golden Temple
Golden Temple

இது தொடர்பாக பேசிய சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழுவின் (SGPC) செயலாளர் பிரதாப் சிங், ``1965, 1971 ஆகிய ஆண்டுகளில் இந்திய-பாகிஸ்தான் போர்களின் போது - பாதுகாப்பு நடவடிக்கைகளாக பொற்கோயில் வளாகத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்தப் பயிற்சியை ஒப்புக் கொள்ள வேண்டும். மர்யாதா -வைக் கவனித்து, ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பின் ‘பர்காஷ்’ நடைபெற்ற இடங்களில் விளக்குகள் மங்கலான முறையில் எரிந்தது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

போர் ஒத்திகைப் பயிற்சி: "எனக்கு நாடுதான் முக்கியம்" - திருமணத்தை 2 மணி நேரம் தள்ளிவைத்த மணமகன்

இந்தியா பாகிஸ்தான் இடையே தொடரும் பதற்றமான சூழலைச் சமாளிக்க, அனைத்து மாநில அரசுகளும் போர் ஒத்திகையை நிகழ்த்த வேண்டும் என இந்திய அரசு கேட்டுக்கொண்டது.அதன் அடிப்படையில், "போர்க்காலங்களின்போது இந்திய எல்ல... மேலும் பார்க்க

Pope: வெளியேறிய வெள்ளை புகை; வாடிகனில் புதிய போப் ஆண்டவர் தேர்வு!

கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி தனது 88 ஆவது வயதில் மறைந்தார். இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் உயிரிழந்தார்.அவரது ... மேலும் பார்க்க

``பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் இதனால் அழியப்போகிறது..” - எலான் மஸ்க் எச்சரிப்பது என்ன?

ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனர் எலோன் மஸ்க், சூரியனால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழிக்கப்படும் என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.சூரியனின் வெப்பத்தால் பூமி அழியலாம், எனவே செவ்வாய்கிரகத்தில் மன... மேலும் பார்க்க

`இந்தியாவுக்கு எதிரானப் போரில் எத்தனை பேர் பங்கெடுப்பீர்கள்?' - மதகுருவின் கேள்விக்கு மக்களின் பதில்

ஜம்மு காஷ்மீர் பஹல்கம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே வார்த்தைப்போர் தொடர்ந்து வருகிறது. அதே நேரம் பாகிஸ்தானிலும் அந்த அரசுக்கு எதிரான மனநிலை அதிகரித்திருக்கிறது. இதை தெளிவ... மேலும் பார்க்க

36 இலக்கத்தில் வங்கிக் கணக்குக்கு வந்த பணம்; சில மணி நேரத்தில் எலான் மஸ்குக்கு டஃப் கொடுத்த விவசாயி!

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிப்பவர் அஜித். சாதாரண விவசாயத் தொழிலாளியான இவரின் வங்கிக் கணக்கில் சில ஆயிரங்களை சேமிப்பாக வைத்திருந்தார். கடந்த ஏப்ரல் 24-ம் தேதி அவரின... மேலும் பார்க்க

`house of horror' - திகில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட 3 சிறுவர்கள் மீட்பு.. பகீர் வாக்குமூலம்

ஸ்பெயினின் புறநகரான ஓவியோடோவில் ஒரு வீடு. அந்த வீட்டிலிருந்து வித்தியாசமான சத்தங்கள் வருவதாக காவல்துறைக்கு புகாரளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது காவல்துறை. அந்த வீட்டில் அமெர... மேலும் பார்க்க