செய்திகள் :

Hit 3 கதை திருட்டு? "பணம் தர மாட்டோம்; கிரெடிட் தரோம்னு சொல்லிருந்தா கூட..." - விமலவேலன் பேட்டி

post image

படத்தில் வரும் க்ரைம் த்ரில்லரையே ஓரங்கட்டி செம்ம ட்விஸ்ட் அடித்திருக்கிறது, 'ஹிட் 3' திரைப்படத்தின் கதை விவகாரம்.

நடிகர் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஹிட் 3' படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக்குவித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

தற்போது ஓடிடியிலும் வெளியாகி இந்திய அளவில் கவனம் ஈர்த்திருக்கும் நிலையில், தனது ‘ஏஜென்ட் 11’ என்ற கதையைத் திருடி, ‘ஹிட் 3’ படம் எடுத்துவிட்டார் நானி என, தமிழ்நாட்டைச் சேர்ந்த உதவி இயக்குநர் விமலவேலனும் நானி ரசிகையுமான அவரது மனைவி எழுத்தாளர் சோனியா விமலும் நீதிமன்றத்தில் ‘கதை திருட்டு’ வழக்குத் தொடுத்திருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வரும் ஜூலை 7-ஆம் தேதி நானி தரப்பு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், விமலவேலனிடமும் அவரது மனைவி எழுத்தாளர் சோனியாவிடமும் பேசினேன்.

Nani
Nani

"என்னோட சொந்த ஊர் தென்காசி. படங்களிலும் சீரியல்களிலும் 10 வருடங்களா உதவி இயக்குநரா ஒர்க் பண்ணியிருக்கேன். 'ஹிட் 3' கதை, அதாவது 'ஏஜென்ட் 11' என்னோட மூணாவது கதை.

'யாத்ரா', 'நிருபன்' என ஏற்கனவே இரண்டு கதைகள் எழுதி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துல பதிவு பண்ணியிருக்கேன். எனக்கு க்ரைம் த்ரில்லர் ஜானர் ரொம்பப் பிடிக்கும். அதனால, க்ரைம் த்ரில்லர் ஜானரில் 'ஏஜென்ட் 11' கதையை கொரோனா டைம்ல ஒன்றரை வருடங்கள் நிறைய ஒர்க் பண்ணி எழுதினேன்.

6 சைக்கோ கில்லர்ஸ் சீக்ரெட் வாட்ஸ்அப் குரூப் ஓப்பன் பண்ணி, பொதுமக்களைக் கொடூரமா கொலை பண்ணி அதை வீடியோவா குரூப்ல ஷேர் பண்ணி ரசிக்கிறாங்க. டிடெக்டிவ் ஏஜென்சி நடத்துற கதையின் நாயகன் அதை எப்படிக் கண்டுபிடிச்சி அழிக்கிறாருங்கிறதுதான் கதை.

'ஹிட் 3' படத்துல வாட்ஸ்அப் குருப்புக்குப் பதிலா வெப்சைட். டிடெக்டிவ்க்குப் பதிலா போலீஸு. 6 சைக்கோ கில்லர்ஸுக்கு பதிலா 150 பேர். இப்படி, எல்லாமே என் கதையை வைத்து டெவலப் செய்ததுதான்.

2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் 'ஏஜென்ட் 11' கதையைப் பதிவு செய்துவிட்டேன். நானும் என் மனைவி சோனியா விமலும் சேர்ந்துதான் இந்தக் கதையை எழுதினோம்.

பொதுவா, த்ரில்லர் கதைகளில் ஹீரோவுக்கு பர்சனல் லாஸ் இருக்கும்ங்கிற மாதிரி எடுப்பாங்க. நாங்க எந்த பர்சனல் லாஸும் வைச்சு எழுதல. க்ரைம் த்ரில்லர் ஜானருக்கே உரிய எல்லாத்தையும் பிரேக் பண்ணி எழுதினோம். அதனாலதான், 'ஹிட் 3' படம் புதுசா இருக்குன்னு எல்லோரும் பாராட்டிட்டிருக்காங்க.

உதவி இயக்குநர் விமலவேலன்
உதவி இயக்குநர் விமலவேலன்

என்னோட மனைவி சோனியா, நடிகர் நானியோட பெரிய ஃபேன். அவங்களோட சோஷியல் மீடியா முழுக்க நானியைப் பற்றித்தான் எழுதிக்கிட்டே இருப்பாங்க. நானியோட எக்ஸ் தளத்தில் 'நமஸ்தே நானி'ன்னு பேர் வெச்சிருக்கார். இவங்க, தன்னோட பேரை 'நமஸ்தே சோனி'ன்னு வெச்சிருக்கான்னா எந்தளவுக்குப் பிடிக்கும்னு பார்த்துக்கோங்க.

நான் செல்வராகவன் சார்ட்ட உதவி இயக்குநரா ஒர்க் பண்ணியிருக்கேன். கடந்த 10 வருடங்களா வாய்ப்பு தேடியிருக்கேன். 'ஏஜென்ட் 11' கதைக்கு ஹீரோ பெப்பியா, ஸ்டைலிஷா இருக்கிற மாதிரி உருவாக்கியிருந்தோம். இந்தக் கதைக்கு நானி, ரொம்பவே பொருத்தமா இருந்தார்.

அதனால்தான், நானிக்கிட்டேயே அனுப்பி இயக்குநர் வாய்ப்பு கேட்கலாம்னுதான் அவரோட மேனேஜர்கிட்டே மெயில் ஐடி வாங்கினோம். அதுவும், என் மனைவி சோனியா சொன்னதாலதான் நானிக்கு எங்களோட 300 பக்கக் கதையை 5 பக்கங்களுக்குச் சுருக்கி 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மெயிலில் அனுப்பி வைத்தோம்.

5 பக்கங்களா இருந்தாலும் கதையோட முழு சாரம்சமும் அதில் இருக்கும். ஆனா, நானி சார்க்கிட்டேயிருந்து எந்தப் பதிலும் வராததால அப்படியே விட்டுட்டோம். என் மனைவி, நானி ரசிகைங்கிறதால நானியோட எல்லா படங்களையும் குடும்பத்தோட பார்த்துடுவோம்.

அப்படித்தான், வழக்கம்போல 'ஹிட் 3' பார்க்கப்போனோம். பார்த்தா அப்படியே அதிர்ச்சியாகிட்டோம்” என்று இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாதவராய் பேசிய விமலவேலனைத் தொடர்ந்து, அவரது மனைவி சோனியா சொல்லத் தொடங்கினார்.

சோனியா விமல்

“நாங்க தென்காசி மாவட்டத்துல இருக்கோம். இங்கு, நானியோட படங்கள் பெருசா ரிலீஸ் ஆகாது. நானி தயாரிச்ச 'கோர்ட்' படத்தையே தென்காசியிலிருந்து, மதுரை வந்துதான், அவருக்காகப் பார்த்தோம். 'ஹிட் 3' படமும் அப்படித்தான் பார்த்தோம்.

அவ்ளோ நேரம் ட்ராவல் பண்ணி, செலவு பண்ணிக்கிட்டு வந்து பார்க்கிறேன்னா எந்தளவுக்கு ரசிகையா இருப்பேன்? 'ஹிட் 3' படத்தைப் பார்த்தபோதுதான் நாங்க ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டாலும் ஒரு ரசிகையாக முதலில், என்னோட கணவர்கிட்ட வேணாம் விட்டுடலாம்னுதான் சொன்னேன்.

அதுக்கப்புறம் ஒரு மனைவியா என்னால பொருத்துக்க முடியல. நானி சாரை எதிர்த்து போராடணும்னு முடிவு பண்ணிட்டேன். அதுக்கப்புறம்தான், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்தோம். நீதிமன்றம் மூலம் நோட்டீஸும் அனுப்பினோம்.

படம் ஜூன் முதல் வாரம் ஓடிடியில வெளியாக வேண்டியது. ஆனா, எங்களோட நோட்டீஸைப் பார்த்ததும் அவசர அவசரமாக ஓடிடியில் மே மாதமே ரிலீஸ் பண்ணிட்டாங்க. தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்ததுக்கு பாக்யராஜ் சாரும் அவரதும் டீமும் படத்தை இரண்டு தடவைப் பார்த்திருக்காங்க.

பாக்யராஜ் சார், 'ஹிட் 3' கதை எங்களோடதுதான்னு உறுதி செய்த பிறகுதான் சப்போர்ட்டா அறிக்கை வெளியிட்டிருக்காங்க. பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்கிற பாக்யராஜ் சார் மற்றும் அவரது டீமுக்கு இந்த நேரத்துல நன்றியைத் தெரிவிச்சுக்கிறோம்” என்று சோனியா சொல்ல, விமலவேலன் குறுக்கிட்டு, “சினிமாவுல புஷ்கர்-காயத்ரி தம்பதி மாதிரி நானும் மனைவியும் சேர்ந்து சாதிக்கணும்னு ஆசை. நானி சாரோ வேற எந்த நடிகரோ என் இயக்கத்துல நடிச்சிருந்தா, நான் ஒரு டைரக்டர் ஆகியிருப்பேன். அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைச்சிருக்கும்.

என்னோட சம்பளம் எவ்வளவா இருந்திருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. நாங்க ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருப்போம். ஆனா, எங்களுக்குத் தெரியாம எங்களோட கதையைத் திருடி படம் எடுத்து தியேட்டர், ஓடிடின்னு சம்பாதிச்சுட்டாங்க. இனிமே கிரெடிட் போட்டா மட்டும் என்ன வரப்போகுது?

நானி சாருக்கு அனுப்பினப்பவே கதையைப் படிச்சுட்டு 'பணம் கொடுக்க முடியாது.. கிரெடிட் மட்டும் கொடுக்கிறோம்னு சொல்லியிருந்தா தாராளமா ஓகே சொல்லியிருப்பேன்.

எங்களுக்குப் பணமும் முக்கியமில்ல. பப்ளிசிட்டிக்காகவும் இப்படிப் பண்ணல. எங்க உழைப்பு எல்லாமே திருடப்பட்டிருக்கேங்கிற வேதனையும் ஏமாற்றமும்தான் மனசுல ஓடிக்கிட்டிருக்கு. அதனால்தான், 'ஹிட் 3' வருமானத்தில் 20 சதவீதம் கொடுக்கணும்னு கேட்டிருக்கோம்.

இன்னும் சொல்லப்போனா, அந்த 20 சதவீதம் கூட எனக்குப் பெரிய கிரெடிட் இல்ல. ஒரு கஷ்டப்படுற உதவி இயக்குநரின் கதையைத் திருடினது மட்டுமில்லாம, அவருக்கு உண்மையான ரசிகரையும் ஏமாற்றிட்டார், நானி” என்கிறார், பெரு வேதனையோடு.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Shankar: " 'கேம் சேஞ்சர்' படம் என் தவறான முடிவு; அதை செய்திருக்க வேண்டும்!" - தயாரிப்பாளர் தில் ராஜூ

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகியிருந்த திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த இந்த தெலுங... மேலும் பார்க்க

Kubera: 'தனுஷிற்கு தேசிய விருது கிடைக்கும், அப்படி கிடைக்கவில்லை என்றால்...' - நடிகர் சிரஞ்சீவி

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது.இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நேற்று (ஜூன்22)நடைபெற்றது.... மேலும் பார்க்க

Kubera: 'இதனால்தான் சிரஞ்சீவி சாரை எல்லோருக்கும் பிடிக்கும், கமல் சார் ...'- நெகிழும் நாகர்ஜுனா

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது.தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியிருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின் வெற்றி... மேலும் பார்க்க

" குபேரா படத்தில் நம்மால் நடிக்க முடியுமா? என்ற கேள்வி எனக்குள் இருந்தன, ஆனால்.."- ராஷ்மிகா மந்தனா

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வரவேற்பைப் ... மேலும் பார்க்க

Vijay Deverakonda: விஜய் தேவரகொண்டா மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் - காரணம் என்ன?

பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் 'ரெட்ரோ'பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது பஹல்காம் ... மேலும் பார்க்க

HIT 3 கதை விவகாரம்: நானி மற்றும் படக்குழுவினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

ஹிட் 3 திரைப்பட கதைத் திருட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் நானி மற்றும் திரைப்பட குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஹிட் 3 திரைப்படத்தின் கதை தன்னிடம் இருந்து திருடப்பட்டது என திரைக்கதை ஆச... மேலும் பார்க்க