செய்திகள் :

India - Pakistan : "முடிவெடுப்பதில் இரு நாடுகளுக்கும் உதவ முடிந்ததில் பெருமை கொள்கிறேன்" - ட்ரம்ப்

post image

பஹல்காம் தாக்குதலுக்கு (ஏப்ரல் 22) பதிலடியாக, தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் (மே 7) நடத்தியது. அதைத் தொடர்ந்து, மே 8-ம் தேதி இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகள் மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்த இந்தியா எதிர்த்தாக்குதல் நடத்தி முறியடித்தது.

India - Pakistan
India - Pakistan

நிலைமை மேலும் மோசமடையும் வேளையில், "அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டன." என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

அதன் பிறகு, பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார், இரு நாடுகளும் மோதல் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்க, இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் இதைத் தெரிவித்தார். `மோதல் நிறுத்தம் முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த முடிவை இந்திய அரசுதான் அறிவித்திருக்க வேண்டும் எதற்காக இடையில் அமெரிக்கா?' என்ற விமர்சனங்களும் எழுந்தது.

donald trump - டொனால்ட் ட்ரம்ப்
donald trump - டொனால்ட் ட்ரம்ப்

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில், "தற்போதைய ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டிய நேரம் இது என்பதைப் புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம், மன உறுதியைக் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலிமையான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க துணிச்சலான முடிவை எடுக்க அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

இரு நாடுகளுடனும் கணிசமாக வர்த்தகத்தை அதிகரிக்கப் போகிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் தொடர்பாக ஒரு தீர்வை எட்ட முடியுமா என்பதைப் பார்க்க இருவருடனும் (இந்தியப் பிரதமர், பாகிஸ்தான் பிரதமர்) இணைந்து பணியாற்றுவேன். சிறப்பாகச் செயல்பட்ட இரண்டு தலைமைகளையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக!" என்று பதிவிட்டிருக்கிறார்.

வக்ஃப் மசோதா: 'இடைக்கால நடவடிக்கையில் தவெக... ஆனால் திமுக?' - தவெக தலைவர் விஜய் காட்டம்

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் திமுகவை விமர்சித்து தவெக தலைவர் விஜய் ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, "ஒன்றிய பாஜக அரசால் சமீபத்தில் கொண்டு வரப்... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: 'திமுக, அதிமுக உரிமை கோருவதில் நியாயம் இல்லை' - திருமாவளவன்

கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழ்நாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்திய செ... மேலும் பார்க்க

தேர்தலில் தோல்வியை தழுவிய ஜக்மீத் சிங்; கனடாவில் இனி காலிஸ்தான் கோரிக்கை என்னவாகும்? - ஓர் அலசல்!

"இந்த அறையில் இருக்கும் அனைவருக்கும் நன்றி. நீங்கள் செய்த அனைத்திற்கும் மிகவும் நன்றி. நியூ டெமாக்ராட்ஸிற்கு (New Democrats) இந்த இரவு ஏமாற்றமளிக்கக்கூடியதாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். மிக நல்ல... மேலும் பார்க்க

கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை கருத்து; மன்னிப்பு கேட்ட பாஜக அமைச்சர் - என்ன நடந்தது?

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி... மேலும் பார்க்க