செய்திகள் :

India - USA: `இந்தியா - அமெரிக்கா உறவு ஒருதலைபட்சமாகவே இருந்தது’ - என்ன சொல்கிறார் அதிபர் ட்ரம்ப்

post image

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றபோது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான உறவில் நெருக்கமான சூழலே நிலவியது.

உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் இந்தியாவை தொடர்புபடுத்தத் தொடங்கியதிலிருந்து இந்த உறவில் விரிசல் ஆரம்பமானது.

தொடர்ந்து இந்தியா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய அதிபர் ட்ரம்ப் ``அமெரிக்காவே முதன்மை" (America First) என்ற கொள்கையை தீவிரமாகப் பின்பற்றினார்.

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க பொருட்களுக்குப் பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக தெரிவித்தார்.

பீட்டர் நவேரா
பீட்டர் நவேரா

இதனால் அமெரிக்க வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாகவும், இது ஒரு "ஒருதலைப்பட்சமான" உறவு என்றும் விமர்சித்தார்.

அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என வெளிப்படையாகப் பேசினார்.

குறிப்பாக, ஹார்லி டேவிட்சன் (Harley-Davidson) போன்ற அமெரிக்க பைக்களுக்கு இந்தியா விதித்த அதிக வரிகளை ட்ரம்ப் பல கூட்டங்களில் குறிப்பிட்டுப் பேசினார்.

இந்த நிலையில்தான், இந்த வர்த்தகப் பிரச்னைகளைச் சரிசெய்ய அமெரிக்காவின் "பொதுப்படுத்தப்பட்ட முன்னுரிமை அமைப்பு" (Generalized System of Preferences - GSP) திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த வர்த்தகச் சலுகைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதனால், அமெரிக்காவிற்குப் பல கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை வரி இல்லாமல் ஏற்றுமதி செய்து வந்த இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ இந்தியா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், ``அமெரிக்கா இந்தியாவுடன் மிகவும் நன்றாகப் பழகுகிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஆனால் இந்தியாதான் அமெரிக்கா மீது அதிக வரிகளை விதித்து வருவதால் பல ஆண்டுகளாக அந்த உறவு ஒருதலைப்பட்சமாகவே இருந்தது.

நான் பதவியேற்றபோதுதான் அது மாறியது. இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட சில வரிகளை நீக்குவது குறித்து எந்தப் பரிசீலனையும் இல்லை. அதே நேரம் இந்தியாவுடனான எங்கள் உறவில் எந்த சிக்கலும் இல்லை." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சொத்துக் குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்; செப்., 15-க்குள் அமல்படுத்த உத்தரவு!

திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், 2006 - 2011 ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, 2007 - 2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரின் ம... மேலும் பார்க்க

பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" - தேஜஸ்வி விமர்சனம்

ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், பிரதமர் மோடி அவரது தாய் காங்கிரஸ், ஆர்.ஜே.டி பேரணியில் அவமதிக்கப்படதாகப் பேசியது ஒரு நாடகம் எனப் பேசியுள்ளார்.மோடியை விமர்சித்துப் பேசிய தேஜஸ்வி, "நம் எல்லோரு... மேலும் பார்க்க

NIRF அறிக்கை: "நாட்டின் தலைசிறந்த 17 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது" - ஸ்டாலின் பெருமிதம்!

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) வெளியிட்டுள்ள 2025ம் ஆண்டுக்கான தரவரிசையில் தமிழக கல்வி நிறுவனங்கள் முதலிடம் பிடித்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வ... மேலும் பார்க்க

அதிமுக-வின் சூப்பர் சீனியர்; எம்.ஜி.ஆர் - ஜெ காலத்து ரத்தத்தின் ரத்தம் - யார் இந்த செங்கோட்டையன்?!

முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன்அதிமுக-வுக்குள் மீண்டும் ஒரு வெடியை கொளுத்திப் போட்டிருக்கிறார். நாளை காலை 9 மணிக்கு மனம் விட்டுப் பேசப் போகிறேன் என தேதி நேரமெல்லாம் குறித்திருக்கிறார். எடப்பாடிக்கும்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "வெளிய போங்க; அதான் உத்தரவு" - பத்திரிகையாளர்களை மிரட்டிய போலீஸ்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் இன்று கூடியிருந்தனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். அப்போது... மேலும் பார்க்க