செய்திகள் :

Maaman: "எங்கோ ஒரு கோணத்தில் தொடும் உணர்வுப்பூர்வமான பயணம் இது!" - சூரி நெகிழ்ச்சி

post image

தற்போது முன்னணி நடிகராக அடுத்தடுத்த படங்களின் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார் சூரி. அவரது நடிப்பில் வெளியாகியிருக்கும் 'மாமன்' திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

உறவுச் சிக்கலைப் பேசும் இப்படத்தின் கதாசிரியரும் சூரியே. தற்போது 'மாமன்' படத்தின் வெற்றி குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் சூரி.

Soori
Soori

அந்தப் பதிவில் அவர், "உண்மையான வெற்றி என்றால்… உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மனதார மதிப்பளிப்பதில் தான் ஆரம்பமாகிறது.

அந்த நம்பிக்கையோடு 'மாமன்' கதையை நான் தொடங்கினேன்.

'மாமன்' என் வாழ்க்கையில் நடந்த சில உண்மையான சம்பவங்களைத் தழுவி உருவாக்கப்பட்டது. ஆனால், நம்மில் பலருடைய வாழ்க்கையிலும் எங்கோ ஒரு கோணத்தில் தொடும் உணர்வுப்பூர்வமான பயணம் இது.

இந்த உணர்வுகளை என் இயக்குநர் மிக நுட்பமாக உணர்ந்து, ஆழ்ந்த அக்கறையுடனும் முழு அர்ப்பணிப்புடனும் எடுத்துக்கொண்டு, அதை உயிரோட்டமுள்ள திரைப்படமாக மாற்றியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்தப் பயணத்தில், ஒவ்வொரு நடிகரும் தங்களது கதாபாத்திரங்களை மனதார உணர்ந்து, உயிரோட்டத்துடன் அரங்கேற்றினர்.

அதேபோல், ஒளிப்பதிவு, இசை, தொகுப்பு, ஒலி, கலைத்துறை, உடை வடிவமைப்பு, நடனம், சண்டை இயக்கம், எழுத்து, தயாரிப்பு நிர்வாகம், வாகன வசதி என ஒவ்வொரு தொழில்நுட்பக் குழுவும் தங்களின் முழு அர்ப்பணிப்புடனும் நம்பிக்கையுடனும் பணியாற்றினர்.

Soori - Maaman
Soori - Maaman

அவர்களின் அயராத உழைப்பும் நேர்த்தியும் தான் 'மாமன்' இன்று உங்கள் இதயங்களில் இடம் பெற்றிருக்கும் முக்கிய காரணம்.

இன்று 'மாமன்' திரைப்படம் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்திலும் ஓடிக்கொண்டிருக்கிறது… ஆனால், அது திரையில் மட்டும் ஒலிப்பதல்ல, நீங்கள் அளித்த அன்பிலும், பாராட்டிலும், உற்சாகமான புன்னகைகளிலும், ஒவ்வொரு குடும்பத்தின் உள்ளத்திலும் அது வாழ்கிறது.

உங்கள் அன்பும் ஆதரவும் தான் எனக்கு உண்மையான வெற்றியும் மகிழ்ச்சியும். 'மாமன்' படத்தை உங்கள் குடும்பத்தோடு இணைந்து ரசித்து, உள்ளத்தோடு ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியும் வாழ்த்துகளும்!" எனப் பதிவிட்டுள்ளார்.

Shobana: 'இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்'- ஷோபனா நெகிழ்ச்சி

மத்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் மத்திய அரசு 139 பத்ம விருதுகளை அறிவித்தது, இதில் ஏழு பத்ம விபூஷன், 19 பத்... மேலும் பார்க்க

Kamal Haasan: "அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது..!" - கன்னட மொழி விவகாரத்தில் கமல் விளக்கம்!

நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்துப் பேசிய கருத்துகள், பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கும் நிலையில், மன்னிப்புக் கேட்க முடியாது எனக் கூறியுள்ளார்.தக் லைஃப் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், நடிகர... மேலும் பார்க்க

"Suriya 45 படப்பிடிப்பு ஒரு வாரத்தில் முடியும்; அடுத்து 'கைதி 2'..." - அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

‘சூர்யா 45’ மற்றும் ‘கைதி 2’ படங்களின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு (ட்ரீம் வாரியர் நிறுவனம்) பேசியிருக்கிறார்.ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில்,சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும... மேலும் பார்க்க

AV Cinema Awards: `நீங்களும் பங்கேற்கலாம்' அந்த அரிய வாய்ப்புக்கு செய்யவேண்டியது!

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் பல முக்கியமான திரைப்படங்கள் வெளியாகி முத்திரை பதித்திருக்கின்றன. பல கலைஞர்கள் மதிப்புமிக்க படைப்புகளைக் கொடுத்திருக்கின்றனர். நம் கோலிவுட்டுக்கு திறமையான பல புதிய இயக்குநர்... மேலும் பார்க்க