செய்திகள் :

Mollywood: நடிகை மீது இயக்குநர் புகார்; கைது செய்ய உத்தரவிட்ட கேரள நீதிமன்றம்

post image

மலையாளத் திரையுலகின் முக்கியமானவர் பாலசந்திர மேனன். இயக்குநர், கதாசிரியர், நடிகர் எனப் பல்வேறு துறைகளில் இயங்கிய இவர், பத்மஶ்ரீ விருதையும் வென்றிருக்கிறார்.

1980-களில் 40 திரைப்படங்களை இயக்கியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில், மலையாளத் திரையுலகில் பெண்கள் அனுபவிக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து ஹேமா கமிட்டி கடந்த ஆண்டு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.

பாலசந்திர மேனன்
பாலசந்திர மேனன்

அதைத் தொடர்ந்து, மலையாள நடிகை மினு முனீர் (45). இயக்குநரும், நடிகருமான பாலசந்திர மேனன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிலையில், அக்டோபர் 2, 2024 அன்று மலையாள நடிகை மினு முனீர் (45) மீது பாலசந்திர மேனன் புகார் பதிவு செய்தார்.

அந்தப் புகாரில், எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல், என் புகைப்படத்தைப் பகிர்ந்து, என்னைப் பற்றி ஆன்லைனில் தொடர்ந்து அவதூறான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். ஆபாசமான கருத்துக்களை தெரிவித்து அவதூறு பரப்பியிருக்கிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில், நடிகை மினு முனீர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 351(2) (குற்றவியல் மிரட்டல்), தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசமான விஷயங்களை மின்னணு முறையில் வெளியிடுதல் அல்லது அனுப்புதல்) மற்றும் கேரள காவல் சட்டத்தின் பிரிவு 120(o) (தொடர்பு மூலம் தொல்லை ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டது. இந்தப் புகாருக்கு எதிராக நடிகை மினு முனீர் கேரள நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

மினு முனீர்
மினு முனீர்

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரின் மனுவை தள்ளுபடி செய்து, காவல்நிலையத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், கடந்த ஜூன் 30 அன்று கொச்சியில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் முனீர் ஆஜராகி காவலில் எடுக்கப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தது காவல்துறை. இந்த வழக்கை விசாரித்தப்பிறகு உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது.

Vedan: ``பணத்திற்காக சாதியை விற்க வேண்டிய அவசியம் எனக்கில்லை'' - விமர்சனத்துக்கு பதில் அளித்த வேடன்

2020-ம் ஆண்டு, ``நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்பது போன்ற சாதி, வர்க்க, மத அடக்குமுறைகளுக்கு எதிராக `வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' என்ற தலைப்பில் தனியிசைப்பாடலை வெளியிட்டார் ராப் பாடகர... மேலும் பார்க்க

Anupama: "மலையாள சினிமாவில் விமர்சனங்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன்" - அனுபமா வருத்தம்

பிரவீன் நாரயணன் இயக்கத்தில் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன், திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'Janaki vs State Of Kerala' திரைப்படம் வரும் ஜூன் 27ம் தேதி வெளியாகிற... மேலும் பார்க்க

Mammootty: ``மம்மூட்டிக்கு ஒரு சிறிய உடல்நலப் பிரச்னை..." - MP ஜான் பிரிட்டாஸ் சொல்வது என்ன?

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்குப் புற்றுநோய் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. அதை முற்றிலும் மறுத்த நடிகர் சங்கம், ``நடிகர் மம்மூட்டிக்குப் புற்றுநோய் இருப்பதாக வரும் செய்திகள் போலியானவை... மேலும் பார்க்க

Anupama: ``சிம்ரன், அசினுக்கு நடந்ததுதான் அனுபாமாவுக்கு நடக்கிறது!'' - சுரேஷ் கோபி ஓப்பன் டாக்

சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா' திரைப்படம் இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் அனுபம... மேலும் பார்க்க

Thudarum : `அந்த திரைக்கதை என்னுடையது!' - மோகன்லால் படத்தின் மீது கதைத்திருட்டு புகார்

இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில், மோகன்லால், ஷோபனா நடிப்பில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படம் ‘துடரும்’. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ‘துடரும்' படத்தில்...ஓட... மேலும் பார்க்க

Dileep: "காதல் மற்றும் குடும்ப உறவுகளின் மாறிவரும் நிலையைப் பிரதிபலிக்கும் கதை!" - நடிகர் திலீப்

மலையாளத் திரையுலகில் நடிகர் திலீப் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ப்ரின்ஸ் & ஃபேமிலி. இது நடிகர் திலீப்பின் 150-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரையரங்க... மேலும் பார்க்க