செய்திகள் :

Operation Sindoor: ``15 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு'' - கர்னல் சோபியா குரேஷி

post image

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, நேற்று (மே 7) பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது `ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலுக்கு, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோம்கா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் தலைமை தாங்கினார்.

Operation Sindoor
Operation Sindoor

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் 15 இடங்களைத் தாக்க பாகிஸ்தான் இலக்கு வைத்ததாககாவும், அதை இந்திய படை முறியடித்துவிட்டதாகவும் கர்னல் சோபியா குரேஷி கூறியிருக்கிறார்.

டெல்லியில் பேசிய கர்னல் சோபியா குரேஷி, "நேற்று ஆபரேஷன் சிந்தூர் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், பாகிஸ்தான் ராணுவ தளங்கள் எதுவும் குறிவைக்கப்படவில்லை என்று தெளிவாகாகக் கூறப்பட்டது. அதேசமயம், இந்தியா மீது ஏதேனும் ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மே 7-க்கும் மே 8-க்கும் இடைப்பட்ட இரவில் வந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தராலி, பூஜ் என வட மற்றும் மேற்கு இந்தியாவில் ட்ரோன், ஏவுகணைகள் ஆகியவற்றின் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும், வான் பாதுகாப்பு அமைப்புகளால் அது முறியடிக்கப்பட்டது. இது பாகிஸ்தானின் தாக்குதல் என்று நிரூபிக்கும் வகையில் இந்த தாக்குதலில் ஏற்பட்ட இடிபாடுகளிலிருந்து பாகங்கள் கிடைக்கின்றன." என்று கூறினார்.

``தீவிரவாதத்துக்கு எதிராக நிற்கிறோம்; எங்கள் மண்ணை பயன்படுத்த முடியாது'' - நேபாளம் அறிக்கை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில் நேபாளம் நாட்டின் வெளியுறவுத் துறை பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. பத்திரிகை செய்தியில்,"ஏப்ரல் 22, 2025 தேதியில் ஒரு நேபாள... மேலும் பார்க்க

`விமான நிலையங்களில் தீவிர சோதனை; பார்வையாளர்கள் வருகைக்கு தடை..' - பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறை உத்தரவிட்டிருக்கிறது.பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்திய... மேலும் பார்க்க

`கடும் மோதல்' வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் F-16 போர் விமானம்!

பாகிஸ்தானின் அதிவேக சூப்பர்சோனிக் விமானமான F-16போர் விமானத்தை இந்தியாவின் தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணைகள் வீழ்த்தியுள்ளதாக என்.டி.டி.வி தளம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு ... மேலும் பார்க்க

Doctor Vikatan: வகுப்பறையில், மீட்டிங் நடக்கும்போது.. தூக்கம் வருவது ஏன்?

Doctor Vikatan:மீட்டிங் நடக்கும்போது, வகுப்பறையில் இருக்கும்போதெல்லாம் தூக்கம் வருவது ஏன்... சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது இயல்பு. ஆனால், இது போன்ற இடங்களில் சாப்பிடுவதற்கு முன்பும் தூக்கம் வருகிறதே.... மேலும் பார்க்க

காஷ்மீர் மக்களை காத்து நிற்கும் `S-400 சுதர்சன் சக்ரா' அதிநவீன பாதுகாப்பு பற்றி தெரியுமா?

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக காஷ்மீரில் வான்வழி தாக்குதலை நடைபெற்றுவருகிறது. மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ப... மேலும் பார்க்க

இரவில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்; ஜம்மு காஷ்மீரில் ஒலித்த அபாய சைரன்; இந்தியா பதிலடி!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் நேற்று (மே 7) பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ... மேலும் பார்க்க