செய்திகள் :

Pahalgam: "தீவிரவாதத்துக்கு எதிராகத் தோளோடு தோள் நிற்கணும்" - இஸ்ரேல் பிரதமருடன் மோடி பேசியது என்ன?

post image

பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைப்பேசியில் பேசியிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

28 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் தூதர்களை வெளியேற்றவும், விசாக்களை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டது இந்தியா.

காஷ்மீர்
காஷ்மீர்

இந்திய அரசால் சிந்து நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டது. பதிலுக்குப் பாகிஸ்தான் 1972 சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வானில் பறக்க அந்நாடு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், இந்த பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில், "இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடினேன். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட இந்திய மக்களுக்காக எனது மற்றும் இஸ்ரேல் மக்களின் இரங்கலைத் தெரிவித்தேன்.

Netanyahu
Netanyahu

இந்தியாவுடன் துயரத்தைப் பகிர்ந்து கொண்டமைக்காகப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அத்துடன், தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இரண்டு நாடுகளும் தோளோடு தோள் நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

ஆசியாவை - சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் வழியாக - ஐரோப்பியக் கண்டத்துடன் இணைக்கும் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வழித்தட முன்முயற்சியை முன்னேற்றுவது குறித்தும் நாங்கள் விவாதித்தோம்" என்று பகிர்ந்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து' - உயர் நீதிமன்றம் அதிரடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.கடந்த 1996 ... மேலும் பார்க்க

`துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மிரட்டியுள்ளது’ - குற்றச்சாட்டும் ஆளுநர் ரவி

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ஊட்டி ராஜ்பவனில் துணை வேந்தர்களுக்கான மாநாடு நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெறும் 2 நாள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் ... மேலும் பார்க்க

'பஹல்காமில் எப்படி பாதுகாப்பு குறைபாடானது?' - அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் பேசியதென்ன?

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.'அனைவரும் ஒப்புக்கொண்டனர்' - கிரண் ரிஜிஜு இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பாக பாஜக-வின் கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களிடம்... மேலும் பார்க்க

'எனக்கு பிடிக்கவில்லை; நிறுத்துங்கள்' - புதின் மீது கோபப்படும் ட்ரம்ப் - பின்னணி என்ன?

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நீ......ண்டுகொண்டே போகின்றது. ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையில் பிடி கொடுக்க மறுக்கிறது. 'நாங்கள் மத்தியஸ்த்தில் இருந்து விலகிவிடுவோம்' ... மேலும் பார்க்க

Pahalgam : 'இந்தியாவாக இருந்தாலும், இஸ்ரேலாக இருந்தாலும்..!' - நியூயார்க் டைம்ஸை சாடிய அமெரிக்க அரசு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் இந்திய அளவில் மட்டுமல்ல... உலக அரங்கிலும் மிகவும் அதிர்ச்சி அளித்த விஷயம். அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், இலங்கை என உலகின் பெரும்பாலான நாடுகளிடம் இருந்து இந்தியாவுக்கு ... மேலும் பார்க்க