செய்திகள் :

PMK : 'எம்.ஜி.ஆரும் அழைத்தார்; கலைஞரும் அழைத்தார்; எங்கும் செல்லவில்லை!' - விரக்தியில் ஜி.கே.மணி

post image

'ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பு!'

ராமதாஸூக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் பா.ம.கவின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தைலாபுரத் தோட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். பா.ம.கவில் நிலவும் விரிசலால் தான் பெரும் மனவேதனை அடைந்திருப்பதாக விரக்தியில் பேசியிருக்கிறார்.

ஜி.கே.மணி
ஜி.கே.மணி

ஜி.கே.மணி பேசியதாவது, 'செல்வப்பெருந்தகையுடனான சந்திப்பு கூட்டணிப் பேச்சுவார்த்தை அல்ல. அது மரியாதை நிமித்தமான சந்திப்பே.'அய்யாவுக்கும் சின்னய்யாவுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனை தீர வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமும். இந்தப் பிரச்சனை நீண்டுகொண்டே செல்வது பெருத்த மனவேதனையை கொடுக்கிறது. இதற்கிடையில் என் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.

'எல்லாரும் அழைத்தார்கள்!'

நான் யாரிடமோ கூட்டணி பேசிக்கொண்டிருப்பதாகவும், எந்தக் கட்சிக்கோ செல்லப்போவதாக பேசிக்கொள்கிறார்கள். இதெல்லாம் மனவேதனையைத்தான் கொடுக்கிறது. 45 ஆண்டுகளாக இந்தக் கட்சிக்காக உழைத்திருக்கிறேன். சேர்மனாக இருந்தபோது ஆதரவற்றோர் இல்லங்களை நடத்தி வந்தேன். அதைப் பார்த்துவிட்டு எம்.ஜி.ஆர் அழைத்தார்.

ஜி.கே.மணி
ஜி.கே.மணி

வாரியப் பொறுப்புகளெல்லாம் தருகிறேன் கட்சியில் இணைந்துவிடு என்றார். ஒரு தேர்தலின் போது திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. கலைஞர் என்னை தொடர்புகொண்டார். மருத்துவரிடம் ஆதரவுக்கடிதம் வாங்கி வாருங்கள், உங்களை துணை முதலமைச்சர் ஆக்குகிறோம் என்றார். ஜெயலலிதாவுக்கும் என்னைப் பிடிக்கும். நீங்கள் என்னை விமர்சித்தாலும் நாகரீகமானவர்.

ஜி.கே.மணி
ஜி.கே.மணி

நீங்கள் இருக்க வேண்டிய கட்சி அது இல்லை. அதிமுகவுக்கு வாருங்கள். உங்களுக்கு நல்ல இடத்தைக் கொடுக்கிறேன் என ஜெயலலிதா கூறினார். அப்படிப்பட்ட என்னை கொச்சையாக பேசுகிறார்கள். மருத்துவர் அய்யாவிடம் தனியாக பேசும்போது கண்ணீர் விடுகிறார். சமூகவலைதளங்களில் அய்யாவைப் பற்றியும் சின்னையாவைப் பற்றியும் அவதூறான தகவல்களை பரப்பாதீர்கள். மாறி மாறி பொறுப்புகளை போட்டுக் கொண்டிருப்பது கட்சிக்கு நல்லதல்ல.' என்றார்.

ராமதாஸ் - அன்புமணி: "இணைப்புக்கான சாத்தியங்கள் குறைகிறதா?" - மருத்துவர் ராமதாஸ் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

பாமக நிறுவனர் ராமதாஸ் — தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. நிர்வாகிகளை ஒருவர் நியமிப்பதும் மற்றொருவர் நீக்குவதுமாக அதிரடிகள் தொடர்கிறது. இந்த பரபரப்பான சூழல... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: "பள்ளிகளிலும் போலீஸ் இருக்கணுமா?" - திரிணாமூல் எம்பி சர்ச்சை பேச்சு

நேற்று முன்தினம், கொல்கத்தா சட்டக் கல்லூரி ஒன்றில், அந்தக் கல்லூரி மாணவி ஒருவரை, அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத... மேலும் பார்க்க

CJI BR Gavai: "நீ நீதிபதியானால் அம்பேத்கர் காட்டிய வழியைப் பின்பற்றுவாய்" - தந்தை குறித்து கவாய்

ட்நாக்பூரில் நடந்த கோர்ட் பார் அசோசியேஷன் நிகழ்வில் இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய், தான் சட்டம் தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவத... மேலும் பார்க்க

பாஜக: நடிகர்களுக்குப் போதைப் பொருள் சப்ளை: 'கைதான பிரதீப் உடன் தொடர்பு?' - வினோஜ் P.செல்வம் விளக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடிகர்களுக்குத் போதைப் பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் பாஜக நிர்வாகி வினோஜ் P.செல்வத்துடன் இருக்கும் போட்டோ வைரலானது. பிரதீப்புக்கு, வினோ... மேலும் பார்க்க

BJP: "விசிகவுக்கு எத்தனை தொகுதி கொடுப்பாங்கன்னு முதல்வர்ட்ட கேப்பீங்களா?" - நயினார் நாகேந்திரன்

'நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு!'பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவர் பேசி... மேலும் பார்க்க