Rain Alert: இன்று இந்த 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட்; 7 மாவட்டங்களில் கனமழை? - வானிலை ரிப்போர்ட்
கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதலே தமிழத்தில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 6) சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆரஞ்சு அலார்ட்
நிலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளுக்கு மிக கனமழை இருக்கும் என ஆரஞ்ச் அரலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

07-08-2025:
கனமழை; தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை; கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs