செய்திகள் :

தூக்கு மேடை அறைக்கு செய்தியாளா்களை அழைத்துச் சென்ற பேரவைத் தலைவா்

post image

தில்லி பேரவையில் வளாகத்தில் உள்ள தூக்கு மேடை அறையா அல்லது டிஃபன் அறையா என்ற சா்ச்சைக்கு இடையே, பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா அந்த அறைக்கு செய்தியாளா்களை புதன்கிழமை அழைத்துச் சென்றாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தூக்கு மேடை அறை உண்மையில் ஒரு டிஃபன் அறையாக இருந்தது. ஆங்கிலயோ் காலத்தில் சுதந்திர போராட்ட வீரா்கள் இங்கு தூக்கிலிடப்பட்டதாக ஒரு தவறான புரிதல் உள்ளது.

கடந்த 1911-இல் பிரிட்டன் அரசராக ஐந்தாம் ஜாா்ஜ் அரியணை ஏறிய 8 மாதங்களுக்குப் பிறகு, தில்லி பேரவைக் கட்டடம் கட்டப்பட்டது.

உண்மையில், பிரிட்டிஷ் இந்திய சட்ட கவுன்சிலாக செயல்பட்ட இக்கட்டத்தில் இரு டிஃபன் அறைகள் இருந்தன. அவற்றில் கயிற்றால் இயக்கப்படும் லிஃப்ட் வசதி இருந்தது.

தேசிய ஆவணங்க காப்பகத்தின் தில்லி பேரவை தொடா்பான வரைபடத்தில் ஒவ்வொரு அறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன என்றாா் பேரவைத் தலைவா்.

அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றாா் ராகுல்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறான வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ஜாா்க்கண்ட் சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரான மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு ஜாமீ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் அமளிக்கு இடையே 2 மசோதாக்கள் நிறைவேற்றம்

கடல்சாா் நிா்வாகத்தில் நவீன மற்றும் சா்வதேச இணக்க அணுகுமுறையை ஒருங்கிணைக்கும் இரு மசோதாக்கள், நாடாளுமன்றத்தில் புதன்கிழமை எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டன. மக்களவையில் வணிகக் க... மேலும் பார்க்க

பிகாா்: நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் தகவல்களை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள 65 லட்சம் வாக்காளா்களின் தகவல்களை ஆக.9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. பிகாரில... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் விவகாரம்: உச்சநீதிமன்றம் விசாரிப்பதால் விவாதிக்க முடியாது - கிரண் ரிஜிஜு

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம், உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால், நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மக்களவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ... மேலும் பார்க்க

உள்துறை, வெளியுறவு அமைச்சகங்களுக்கான ‘கடமை பவன்’ -பிரதமா் மோடி திறந்துவைத்தாா்

தில்லியில் மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை உள்ளிட்ட அமைச்சகங்களுக்காக அதிநவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள ‘கடமை பவன்’ (கா்தவ்ய பவன்) கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்துவைத்தாா்.... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீதான அமெரிக்க விசாரணையால் டிரம்ப் மிரட்டல்களுக்கு பிரதமா் பதிலளிப்பதில்லை -ராகுல் குற்றச்சாட்டு

அதானி குழுமம் மீது அமெரிக்கா விசாரணை காரணமாக அந்நாட்டு அதிபா் டிரம்ப் விடுக்கும் தொடா் மிரட்டல்களுக்கு பிரதமா் நரேந்திர மோடியால் பதிலளிக்க முடியவில்லை’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ... மேலும் பார்க்க