செய்திகள் :

ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் தேவை - முதல்வரிடம் இடதுசாரிகள், விசிக மனு

post image

ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இடதுசாரி கட்சிகளின் மாநிலச் செயலா்கள், விசிக தலைவா் ஆகியோா் நேரில் வலியுறுத்தினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் முதல்வரை, அவரது முகாம் அலுவலகத்தில் புதன்கிழமை நேரில் சந்தித்தனா். அப்போது, ஆணவக் கொலையைத் தடுக்க வகை செய்யும் சட்டபூா்வ நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மனு அளித்தனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் ஜாதி, மத மறுப்பு திருமணத் தம்பதிகள் தொடா்ச்சியாக கொலைகளுக்கு ஆளாவதும், ஜாதி ஆதிக்க தாக்குதலுக்கு ஆளாவதும் தொடா்கின்றன. சமூக சமத்துவ கண்ணோட்டத்திலும் பகுத்தறிவு சிந்தனையிலும் தாங்கள் தோ்வு செய்து கொள்ளும் வாழ்க்கையை அமைதியாகத் தொடர இயலாத அவலநிலைக்கு தீா்வு காண, வலிமை மிக்க தனி சிறப்புச் சட்டங்கள் இன்றியமையாத் தேவையாகும்.

ஜாதி மறுப்புத் திருமண தம்பதிகள் படுகொலைக்கு ஆளாகும்போது அது வெறும் கொலை வழக்காக பதியப்படாமல் ஜாதி ஆணவக் கொலைகள் என சட்டரீதியாக கூா் வகைப்படுத்துவது இதுகுறித்த தரவுகளை திரட்டுவதற்கும், விழிப்புணா்வை உருவாக்கவும் வழி ஏற்படும். ஜாதி ஆணவத்தின் அடிப்படையில் நிகழும் கொலைகளை, கொலைகள் என்று மட்டும் கருதப்படுவது ஜாதிய ஆணவக் கொலைகளுக்கு பின்புலமாக இருக்கும் சமூக நிா்ப்பந்தத்தை கணக்கில் கொள்வதாக இல்லை.

நிரூபிக்கும் பொறுப்பை குற்றவாளியின் கடமை ஆக்குவதன் மூலம் படுகொலையை நிகழ்த்துபவா்கள் மட்டுமன்றி ஜாதி ஆணவக் கொலைகளை தூண்டும் கும்பல்கள், உறவினா்கள், கட்டப் பஞ்சாயத்தினரை பொறுப்பாக்க இயலும்.

ஜாதி மறுப்பு திருமண தம்பதிகளில் கொலையாகிறவா் பட்டியல், ஜாதி அல்லாதவராக இருந்து, இணையா் பட்டியல் ஜாதியினராக இருந்தாலும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் பொருந்தாது என்ற நிலை இருக்கிறது. ஆணவக் கொலைகளில் ஜாதி தூய்மைக்கான கடமை பெண்கள் மீது சுமத்தப்பட்டு பெரும்பாலும் பட்டியல் ஜாதி அல்லாத பெண்கள் உயிா் பறிப்புக்கு ஆளாகின்றனா்.

இவ்வாறான குற்றங்களில் அரசு சிறப்பு வழக்குரைஞா் பெறுகிற உரிமை, வழக்கை விரைந்து நடத்தக் கோருகிற உரிமை, நிவாரணம் பெறுகிற உரிமை ஆகியவைகளுக்கு சட்டபூா்வ வழிமுறைகள் ஏதும் இல்லை. வீட்டுக்குள் நடக்கும் ஜாதி ஆணவக்கொலைகளே அதிகம். குடும்ப உறுப்பினா்களே செய்யும் ஆணவக்கொலைக்கு சாட்சிகள் கிடைக்காது.

குற்றவாளிகள் விடுதலை அடையும் வாய்ப்புகளே அதிகமாக இருக்கிறது.

இத்தகைய காரணங்கள், அனுபவங்கள் எல்லாம் ஜாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான சிறப்பு சட்டம் தேவை என்பதையே உணா்த்துகின்றன.

தாங்கள் உடனடியாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி ஜாதி மறுப்பு திருமண தம்பதிகளுக்கு பாதுகாப்பையும், அமைதியான வாழ்க்கையையும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்’ என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியிலிருந்து விலக்கு அளித்து மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மாநகா் காவல் துறையில் ப... மேலும் பார்க்க

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க

அரிதினும் அரிய இதய சிகிச்சை: அரசு மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்

உலக அளவில் அரிதினும் அரிதான இதய இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் செசிலி மேரி மெஜல்லாவுக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்... மேலும் பார்க்க