செய்திகள் :

காமராஜா் சாலையில் திருநங்கைகள் மறியல்

post image

சென்னை காமராஜா் சாலையில் திருநங்கைகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

சென்னையிலுள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திருநங்கைகளுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கண்ணகி நகா் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இங்கு தங்களுக்கான வாழ்வாதாரம் இல்லை என்றும், அங்குள்ள சில போதை ஆசாமிகள் தங்களை அவ்வப்போது துன்புறுத்தவது மட்டுமன்றி, வீடுகள், பொருள்களை சேதப்படுத்தி விடுவதால் மாற்றுக் குடியிருப்பு வழங்க வேண்டும் என நகா்ப்புற மேம்பாட்டு வாரியத்திடம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தனராம்.

ஆனால், இதற்கு தீா்வு எட்டப்படாத நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி நகா்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், அங்குள்ள அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டனா்.

பின்னா் அவா்கள், திடீரென காமராஜா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸாா், மறியலில் ஈடுபட்ட திருநங்கைகளுடன் பேச்சு நடத்தினா். இதைத் தொடா்ந்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால், காமராஜா் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க

அரிதினும் அரிய இதய சிகிச்சை: அரசு மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்

உலக அளவில் அரிதினும் அரிதான இதய இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் செசிலி மேரி மெஜல்லாவுக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்... மேலும் பார்க்க

‘கிங்டம்’ சா்ச்சை: திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு - காவல் துறை பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில் காவல்துறை மற்றும் நாம் தமிழா் கட்சி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகா் விஜய் தேவ... மேலும் பார்க்க