செய்திகள் :

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

post image

சென்னை புறநகா் பகுதியில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (ஆக. 7) ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

சென்னையில் பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் தண்டவாளங்களில் வியாழக்கிழமை (ஆக. 7) காலை 11.10 மணி முதல் பிற்பகல் 3.10 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40, பிற்பகல் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் புகா் மின்சார ரயில்களும், மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து காலை 10.55-க்கு கடற்கரை செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படவுள்ளன.

அதேபோல், சென்ட்ரலிலிருந்து காலை 10.15, பிற்பகல் 12.10,1.05 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் ரயில்களும், காலை 10.30, 11.35 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும், இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும். மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 1, 2.30, 3.15, மணிக்கும், சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 3.10, 3.15, இரவு 9 மணிக்கும் சென்ட்ரல் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

மேலும், சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 3.50 மணிக்கு நெல்லூருக்கும், மறுமாா்க்கமாக நெல்லூரிலிருந்து மாலை 6.45 மணிக்கு சூலூா்பேட்டைக்கு செல்லும் ரயில்கள் என மொத்தம் 17 ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

பகுதி ரத்து: இதற்கிடையே வியாழக்கிழமை (ஆக. 7) செங்கல்பட்டிலிருந்து காலை 9.55 மணிக்குப் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் புகா் மின்சார ரயிலும், கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயிலும் கடற்கரையுடன் நிறுத்தப்படும்.

சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக சென்ட்ரலிருந்து ஆக. 7-இல் காலை 10.30 மணிக்கு பொன்னேரிக்கும், 11.35, பிற்பகல் 2.59 மணிக்கு மீஞ்சூருக்கும், கடற்கரையிலருந்து பிற்பகல் 12.40 மணிக்கு பொன்னேரிக்கும், பொன்னேரியிலிருந்து பிற்பகல் 3.33 மணிக்கு சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியிலிருந்து விலக்கு அளித்து மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மாநகா் காவல் துறையில் ப... மேலும் பார்க்க

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க

அரிதினும் அரிய இதய சிகிச்சை: அரசு மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்

உலக அளவில் அரிதினும் அரிதான இதய இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் செசிலி மேரி மெஜல்லாவுக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்... மேலும் பார்க்க