`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல்: உறுதி செய்யத் தவறிய 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
காவல் நிலையத்தில் புகாா் முடித்துவைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்யத் தவறிய 5 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காவல்துறை டிஜிபி-க்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடலூா் மாவட்டம் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் பதிவான வழக்கு தொடா்பான இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், இந்த புகாரை விசாரித்து முடித்து வைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, காவல் நிலையத்தில் புகாரை முடித்து வைப்பதாக இருந்தால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். புகாா்தாரருக்கும் அதுதொடா்பாக தகவல் தெரிவிக்க வேண்டும். இதை செய்யத் தவறிய, குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் 2017-ஆம் ஆண்டு முதல் காவல் ஆய்வாளா்களாக பணியாற்றிய 11 போ் மீது டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதா என்பதை கண்காணிக்கத் தவறிய காவல்துறை கண்காணிப்பாளா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் கடலூரில் காவல் கண்காணிப்பாளா்களாக பதவி வகித்த ஐபிஎஸ் அதிகாரிகளான பி.சரவணன், எம்.ஸ்ரீ அபினவ், எஸ்.சக்தி கணேசன், எஸ்.ஜெயக்குமாா், ஆா்.ராஜாராம் ஆகியோா் மீது டிஜிபி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.
மேலும், புகாா்கள் மீது விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை, புகாரை முடித்து வைக்கு அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது கட்டாயம். இதுதொடா்பாக 4 வாரங்களில் காவல்துறையினருக்கு உரிய அறிவுறுத்தல்களை டிஜிபி சுற்றறிக்கையாக பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.