செய்திகள் :

Rain Alert: இரவில் கொட்டித் தீர்த்த மழை; இன்று மழை எப்படி இருக்கும்? வானிலை சொல்வது என்ன?

post image

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று மாலை திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. போரூர், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், கோயம்பேடு, முகப்பேர், தியாகராயநகர், அரும்பாக்கம், கிண்டி, அடையாறு, உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

வட சென்னைக்குட்பட்ட ராயபுரம், மணலி, எண்ணூர், கொடுங்கையூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

திருமழிசை, அம்பத்தூர், திருமுல்லைவாயில், பூந்தமல்லி, அயப்பாக்கம், பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.

ஆவடி பகுதிகளில் வானில் மின்னல் எனத் தோன்றியதால், இரவு வானம் பகல் போல் காட்சியளித்திருக்கிறது.

வானிலை
வானிலை

திருவொற்றியூர், திருவள்ளூர், தருமபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தென்தமிழகக் கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டி இருக்கும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

நாட்றம்பள்ளி: விகடன் செய்தி எதிரொலி; பொதுமக்களுக்கு நிழற்குடை அமைக்கும் பணியில் அதிகாரிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள நாட்றம்பள்ளி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர். இப்பகுதியில் ... மேலும் பார்க்க

``என் உயிருக்கு அச்சுறுத்தல்'' - திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சி பகீர் புகார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரைத் திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸார் கடுமையாகத் தாக்கியதில்,... மேலும் பார்க்க

குப்பைக்கூளம்... சுகாதார சீர்கேடு; மக்களை முகம் சுளிக்க வைக்கும் பிராட்வே பேருந்து நிலையம்!

சென்னை பிராட்வேயில் இயங்கிவரும் பேருந்து நிலையம் நவீனமாக்கப்பட்ட பல்நோக்கு போக்குவரத்து வளாகமாக மேம்படுத்தப்பட இருப்பதால், தற்காலிகமாக ராயபுரத்தின் மேம்பாலாத்திற்கு அருகில் 3.45 ஏக்கர் பரப்பளவில் பேரு... மேலும் பார்க்க

``என்னால் கூட ஆட்சியரிடம் பேச முடியவில்லை; சாமானிய மக்களின் நிலை..'' - MLA ஜெயசீலன் சொல்வதென்ன?

திஷா கமிட்டி எனப்படும் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் இன்று காலை தொடங்கியது.நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உற... மேலும் பார்க்க

"அஜித் குமார் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது" - திருமாவளவன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரைத் திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸார் கடுமையாகத் தாக்கியதில்,... மேலும் பார்க்க

துர்கை கோயில் இடிப்பு; சாடிய இந்தியா... விளக்கமளித்த வங்கதேச அரசு!

வங்காளதேச நாட்டிலுள்ள டாக்காவிலிருக்கும் கில்கெட் பகுதியில் துர்கை கோயில் இடிக்கப்பட்டதற்கு தெளிவான காரணங்களை தெரிவித்துள்ளது வங்காளதேச அரசு. ரயில்வேவுக்கு சொந்தமாய் பாத்தியப்பட்ட நிலத்தில் ரயில்வே நி... மேலும் பார்க்க