செய்திகள் :

Rajinikanth: "காஷ்மீரில் அமைதி திரும்புவது எதிரிகளுக்குப் பிடிக்கவில்லை" - ரஜினிகாந்த் கண்டனம்

post image

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய் கிழமை (ஏப்ரல் 22) மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பகுதியில் சுற்றுலாவுக்காக சென்றிருந்த அப்பாவி பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 26 பேர் மரணமடைந்துள்ளனர்.

Pahalgam Attack
Pahalgam Attack

காயமடைந்தவர்கள் ஶ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு நாடுமுழுவதும் உள்ள அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், சர்வதேச தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Rajinikanth கண்டனம்

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், "காஷ்மீரில் நடந்துள்ள தீவிரவாத செயல் கண்டிக்கத்தக்கது. அங்கே அமைதி திரும்பிக்கொண்டிருப்பது எதிரிகளுக்குப் பிடிக்கவில்லை.

தாக்குதல் நடித்தியவர்களையும் அதற்கு பின்னால் இருப்பவர்களையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், இனி இதுபோன்ற ஒரு செயலில் ஈடுபடும் எண்ணம் கனவில் கூட வராதபடிக்கு தண்டனை வழங்க வேண்டும். அதைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது." எனக் கூறியுள்ளார்.

Pahalgam Attack: ``காஷ்மீரில் எனக்கு 2 அண்ணன்கள் உள்ளனர்.." - தந்தையை இழந்த பெண் உருக்கம்

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் (Pahalgam Attack) தந்தையை இழந்த இளம் பெண், தனக்கு இரண்டு காஷ்மீரி சகோதரர்கள் கிடைத்துவிட்டார்கள் எனக் கூறியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.கொச்சியைச் சே... மேலும் பார்க்க

Pahalgam Attack: ``நீதி வழங்கப்படும்'' - சச்சின், விராட், கம்பீர்... கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த தீவிரவாத நடவடிக்கைக்கு முன்னாள், இன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உள்ளிட்ட பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவரா... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாரமுல்லாவில் ஊடுருவல் முயற்சி - 2 தீவிரவாதிகளை வீழ்த்திய ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் குவிந்திருந்த பைசரான்பள்ளத்தாக்கில் திடீரென தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 28 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் உள்ள தலைவ... மேலும் பார்க்க

``நூலிழையில் உயிர் பிழைத்தோம்..'' - காஷ்மீரில் நடந்ததை கண்ணீருடன் விவரிக்கும் மகாராஷ்டிரா தம்பதி

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாஹல்காம் அருகில் மினி ஸ்விட்சர்லாந்து எனப்படும் பகுதியில் தீவிரவாதிகள் நேற்று பிற்பகல் திடீரென புகுந்து சுற்றுலா பயணிகள் மீது சரமாரியாக சுட்டனர். பயங்கரவாதிகள் சுட்டதில் 28 சுற்... மேலும் பார்க்க

J&K: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 20-க்கும் மேற்பட்டோர் பலி?

ஜம்மு காஷ்மீரின், பஹல்காமிலுள்ள சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தச் சம்பவத்தில், உயிரிழந்தோரின் எண்... மேலும் பார்க்க