செய்திகள் :

Ranveer Allahbadia: ``இவர் மூளையில் அழுக்கு..." - யூடியூபரை விளாசிய உச்ச நீதிமன்றம்!

post image

India's Got Latent Show என்ற யூடியூப் நிகழ்ச்சியில் யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா செய்த சர்ச்சைக்குரிய நகைச்சுவை குறித்த பல்வேறு வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

சமய் ரெய்னா என்ற யூடியூபர் நடத்தும் இண்டியா'ஸ் காட் லேடண்ட் ரன்வீர் செய்த நகைச்சுவைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்ததை அடுத்து அவர்மீது புகார் அளிக்கப்பட்டது. தன் மீதான அனைத்து புகார்களையும் ஒரே விசாரணையில் கொண்டுவர ரன்வீர் அல்லாபாடியா உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரை கடுமையாக சாடியுள்ளது.

Supreme Court roasts Ranveer Allahbadia over joke

ரன்வீர் குறித்து, "இது ஆபாசம் இல்லை என்றால் எது ஆபாசம்? நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எப்போதுவேண்டுமானாலும் உங்கள் அநாகரீகத்தையும் ஒழுக்கக்கேட்டையும் காட்டுவதா." என கடிந்துகொண்டார் நீதிபதி சூர்யா காந்த்.

மேலும் அவரது மனு குறித்து, "வெறும் இரண்டு FIRகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்று மும்பையில், மற்றொன்று அசாமில். 100 FIRகள் இருந்தாலும் அவரால் அவரை பாதுகாத்துக்கொள்ள முடியும்" எனத் தெரிவித்தார்.

அத்துடன், "இந்த மாதிரியான நடத்தை கண்டிக்கப்பட வேண்டும். நீங்கள் பிரபலமாக இருப்பதனால் சமூகத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. நீங்கள் இப்படி பேசுவதை உலகத்தில் யாராவது ரசிப்பார்களா? இவர் மூளையில் மிகவும் அழுக்கான ஏதோ இருக்கிறது. அது வெளியேற்றப்பட வேண்டும். இவரை ஏன் நாம் பாதுகாக்க வேண்டும்" எனக் கேள்வி எழுப்பினார்.

"நீங்கள் பயன்படுத்திய வார்த்தைக்காக, உங்கள் பெற்றோர் அவமானப்படுவார்கள். மகள்களும் சகோதரிகளும் அவமானப்படுவார்கள். ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தலைகுனிவு.

Ranveer Allahbadia

உங்களுக்கும் உங்கள் அடியாள்களுக்கும் ஒழுக்கக்கேட்டில் எல்லையே இல்லை. சட்டத்தின் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்." என்றும்கண்டித்தார் நீதிபதி.

ரன்வீர் அல்லாபாடியாவின் கைதுக்கு உச்ச நீதிமன்றம் விலக்களித்தாலும், வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளக் கூடாது என அறிவுறுத்தியிருக்கிறது. மேலும் அவரது பாஸ்போர்ட்டை தானே காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்கு பயணிக்க கூடாது என்றும் கூறியுள்ளது.

அல்லாபாடியா 'பெற்றோர் - உடலுறவு' குறித்து பேசிய நிகழ்ச்சி இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவர் தரப்பில் பொது மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி: சுற்றுலா வந்த காதல் ஜோடி; ரெளடி கும்பலின் வன்கொடுமை கொடூரம் - சுட்டுப்பிடித்த போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான மலைக்கோயிலுக்கு திருப்பத்தூரை சேர்ந்த காதல் ஜோடி கடந்த 19.02.2025 ஆம் தேதி சுற்றுலா வந்துள்ளது. அப்போது, மலையின் மேலே உள்ள தர்காவுக்கு செல்ல முயன்றபோது, அங்கு மற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ஏழை எனக்கூறி அரசிடம் வீடு வாங்கிய அமைச்சருக்கு 2 ஆண்டு சிறை; பதவிக்கு ஆபத்து..

மகாராஷ்டிராவில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் மாணிக்ராவ் கோகடேவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு வீடுகளை கட்டி, ஏழைகள் மற்றும் பொருளாதார ரீதியில் ப... மேலும் பார்க்க

சென்னை: தொழிலதிபர் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு... நேபாள டிரைவர் கைது - அதிர்ச்சி பின்னணி!

சென்னை நுங்கம்பாக்கம், லேக் ஏரியா, 5-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் சுலைமான் (67). இவர் கடந்த 21.12.2024-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். பின்னர் 3.1.2025-ம் தேதி ... மேலும் பார்க்க

கடலூர்: `சங்கத்தை மதிக்கவில்லை..!’ – திருநங்கை அடித்துக் கொலை; சக திருநங்கையர் உள்ளிட்ட 6 பேர் கைது!

கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் இருக்கும் காப்புக் காட்டில், உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் திருநங்கை ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்த உடலை கைப... மேலும் பார்க்க

`வாழ்க்கை சிறப்பாக அமைய பூஜைகள்' - போலி ஜோதிடரிடம் ரூ.6 லட்சம் இழந்த 24 வயது பெண் - நடந்தது என்ன?

பெங்களூரைச் சேர்ந்த 24 வயது பெண் இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்துகொண்ட போலி ஜோசியக்காரரிடம் 6 லட்சம் வரை ஏமாந்திருக்கிறார். தனது திருமணம் குறித்து அறிந்துகொள்ள ஜோசியக்காரரை நாடிய பெண், மூளைச்சலவை செய்யப்பட... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அவனுங்க 3 பேரையும் முடிச்சிடு' - உத்தரவு போட்ட காதலி; கொலைசெய்து வீடியோ அனுப்பிய ரௌடி!

புதுச்சேரியின் மையப்பகுதியில் இருக்கும் ரெயின்போ நகர், அடர்த்தியான குடியிருப்புப் பகுதி. அதில் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டில், மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக க... மேலும் பார்க்க