செய்திகள் :

Relationship: தாம்பத்தியத்தின் 5 நிலைகளும் இரண்டரை வருடங்களும்..!

post image

'ஒரு தம்பதியர் ஒருவர் மேல் ஒருவர் உண்மையான அன்புகூருவதற்கு இரண்டரை ஆண்டுகள் பிடிக்கும் என்பது சில மூத்த தம்பதியரின் அனுபவ கருத்து. அது என்ன இரண்டரை ஆண்டுகள்..? 

happy couple
happy couple

அது காதல் திருமணமோ அல்லது பெற்றோர் பார்த்து வைத்த திருமணமோ, திருமணமாகி ஒரு கூட்டுக்குள் மிக மிக அருகில் இருக்கும் போது,  தன் துணையின் சிறு சிறு உடல் அசைவுகள்கூட அழகாகத் தெரிவதால், அந்த ஈர்ப்பிலேயே முதல் வருடம் ஓடி விடுமாம். அதன் பிறகு பெரும்பாலான மனைவியர் கருவுற்று விடுவார்கள். அதனால், அடுத்த ஒரு வருடம் முழுக்க தன் குழந்தையை வயிற்றில் சுமந்து அல்லாடுகிறாளே என்கிற பரிதவிப்பில் கணவனும், தன்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறானே என்கிற பெருமையில் மனைவியும் இருப்பார்கள். இந்த வேளையில் காமம் கொஞ்சம் எட்டி நிற்கும். அந்த ஈர்ப்பிலேயே முதல் வருடம் ஓடி விடுமாம்..!

pregnancy
pregnancy

அடுத்து பிள்ளை வரும். இரவெல்லாம் கண் விழித்து தொட்டிலை மாறி மாறி ஆட்டுகையில் தூக்கம் பிடிக்கிற அளவுக்குக் காதல் பிடிக்காது. பிறந்த குழந்தைக்கு புது உலகம் பிடிபட்டு அது இரவுகளில் உறங்க ஆரம்பித்தப் பிறகுதான், கணவனுக்கும் மனைவிக்கும் பரஸ்பரம் சிரிப்புகளை பரிமாறிக் கொள்ளவே நேரம் கிடைக்கும். இந்த இடைவெளியில் திருமணமான புதிதில் இருந்த உடல் ஈர்ப்புகள் எல்லாம் சோர்ந்துபோய் ஓடி ஒளிந்திருக்கும்.

அதற்குப்பதிலாக, மனதுக்குள் வழிய வழிய அன்பு குடி புகுந்திருக்கும். கணக்குப் போட்டு பார்த்தால், இந்த அன்பு ஒரு தம்பதியருக்குள் குடி புகுவதற்கு இரண்டரை வருடங்கள் தேவைப்பட்டிருக்கும். இதன் பிறகு நீங்கள் ஒன்றுமே செய்ய தேவையில்லை. உங்கள் தாம்பத்தியத்தை அந்த அன்பே துடுப்புப் போட்டு செலுத்த ஆரம்பித்து விடுமாம்.

Family
Family

வாத்ஸ்யாயனர்கூட, காதலில்  காமம், அக்கறை, நட்பு, கருணை என்று நான்கு நிலைகள் பற்றி  சொல்லியிருப்பார். முதலில் காமம்தான் ஆட்கொள்ளும். பெற்றோரான பிறகு பரஸ்பரம் அக்கறை, தாம்பத்தியத்தில் நீயும் நானும் சமம் என்கிற நட்பு, கடைசியாகக் கருணை. இந்தக் கருணை வந்துவிட்டால், ஒருவருடைய தவற்றை இன்னொருவர் மன்னிக்கிற அளவுக்கு பக்குவப்பட்டு விடுவீர்கள். அப்புறம், வீட்டுக்குள்ளிருந்தும் சரி, வீட்டுக்கு வெளியில் இருந்தும் சரி, எந்த மூன்றாம் நபர் தலையீடும் ஒரு திருமண வாழ்க்கையை அசைக்க முடியாது' என்பது வாழ்ந்தவர்களின் கருத்து. 

படிப்பு மற்றும் வேலை காரணமாக திருமணத்துக்கு பிறகு குழந்தை பிறப்பை தள்ளிப் போட்டாலும்கூட, ஒரு தாம்பத்தியத்தில் காதல், காமம், அக்கறை, நட்பு, கருணை ஆகியவை நிறைந்து இருந்துவிட்டால் எப்பேர்ப்பட்ட சூழலும் அந்த உறவை அசைக்க முடியாத அளவுக்கு இருக்கும். இந்த நிலையை நாமும்தான் முயற்சி செய்துபார்ப்போமே..! 

Family (representational image)

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

உசிலம்பட்டி: `தந்தை இறந்த அதிர்ச்சியில் மகனும் உயிரிழந்த சம்பவம்' - தந்தையர் தினத்தில் நடந்த சோகம்

தந்தையர் தினத்தன்று தந்தை இறந்த சோகத்தில் மகனும் உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர்... மேலும் பார்க்க

``ராதிகாவை சந்திக்கும் வரை திருமண ஆசையே இல்லை.." - காதல் குறித்து ஆனந்த் அம்பானி

தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்து வைத்தார். ஆனந்த் அம்பானியின் திருமண சடங்குகள் குஜராத் மாநிலம் ஜாம்நகர் மற்றும் மும்பையில்... மேலும் பார்க்க

புரிதல், அன்பு, உறவுக்காக AI-ஐ விரும்பும் மனிதர்கள்.. சரியான தேர்வா? - உளவியல் நிபுணர் சொல்வதென்ன?

இன்றைய நவீன காலத்தில் ஏஐ முக்கிய பங்காற்றுகிறது. AI தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து டெக் உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பல்வேறு துறைகளில் ஏஐயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுகாதாரம், பராமரிப... மேலும் பார்க்க

`பொருளாதாரம் முதல் முதுமை வரை..' சிங்கிள் பெண்களுக்கு சில வார்த்தைகள்!

ஒரு பெண் 23 - 30 வயதுக்குள் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்துவிட வேண்டும் என்பதே காலங்காலமாக நம் நாட்டுப் பெண்களுக்குக் கற்பிக்கப்பட்டுவரும் பாடம். இந்த மறைமுகமான விதிமுறையை மீறி இப்ப... மேலும் பார்க்க