செய்திகள் :

Rishi Sunak: ஆரம்பக் காலத்தில் பணிப்புரிந்த நிறுவனம்... மீண்டும் வேலைக்கு திரும்பிய முன்னாள் பிரதமர்

post image

முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்திருக்கும் சம்பவம் இணையத்தில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி சார்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு அந்நாட்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

 இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்

கடந்த ஆண்டு ரிஷி சுனக் தலைமையில் பொதுத் தேர்தலை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி தோல்வியைச் சந்தித்தது. தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதே நேரத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற ரிஷி சுனக் எம்பியாக தற்போது தொடர்ந்து வருகிறார். 

இந்நிலையில்  ரிஷி சுனக் ஆரம்பக் காலத்தில் பணிப்புரிந்த அமெரிக்காவைச் சேர்ந்த Goldman Sachs என்ற நிதி நிறுவனம் ஒன்றில் மீண்டும் பணிக்கு சேர்ந்திருக்கிறார்.

2000ம் ஆண்டு Goldman Sachs நிறுவனத்தில் தொடக்க நிலை பணியாளராகச்  சேர்ந்து, அங்கு மொத்தமாக 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் சீனியர் ஆலோசகராக  அந்நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார்.

 இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்

இந்த நிறுவனத்தில் இருந்து தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் அவர் 'தி ரிச்மண்ட் திட்டம்' என்ற அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரிஷி சுனக்கின் மாமனார் இன்போசிஸ் நாராயண மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ஒலிபெருக்கி இல்லாத மும்பை: மசூதி, வழிபாட்டுத்தலங்களில் இருந்த 1,600 ஒலிபெருக்கிகள் அகற்றம்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்களில் இருக்கும் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவும் சட்டவிரோத ஒலிபெருக்கிகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு வரு... மேலும் பார்க்க

Skincase: மனித தோல் வடிவில் போன் கவர் உருவாக்கிய விஞ்ஞானிகள் - என்ன காரணம் தெரியுமா?

பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் மார்க் டெய்சியர், விர்ஜின் மீடியா O2 உடன் இணைந்து, ஸ்கின்கேஸ் என்ற தொலைபேசி உறையை உருவாக்கியுள்ளார்.இந்த போன் கவர் சூரிய ஒளியில், அதிக யூவி கதிர்கள் வெளிப்படும் போது நிறம் மாற்... மேலும் பார்க்க

Jaipur: 'தினமும் 12 மணி நேரம் படிப்பு; பேத்தியின் உத்வேகம்' - CA தேர்வில் வென்ற 71 வயது முதியவர்!

பேத்தியின் உத்வேகத்தால் ஜெய்ப்பூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது 71 வயதில் சார்ட்டட் அக்கவுண்ட் படிப்பைப் படித்த சாதித்துள்ளார்.லிங்க்ட் இன் பதிவின்படி, ஓய்வு பெற்ற வங்கி நிபுணரான தாராசாந்த் அகர்வால்... மேலும் பார்க்க

சென்னை: "என்னாச்சு? நீங்க ஓகேதான?" - டிராஃபிக் போலீசாரின் வார்த்தையால் நெகிழ்ந்த பெண்; என்ன நடந்தது?

சென்னை போக்குவரத்து காவலருடனான ஒரு சிறிய உரையாடல், பெண் ஒருவரை எப்படி நெகிழ வைத்தது என்பது குறித்து அவர் லிங்க்ட்-இன் தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.சென்னையை... மேலும் பார்க்க

Gingee Fort: செஞ்சி கோட்டையை உலகப் பாரம்பர்ய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ; சுவாரஸ்ய பின்னணி என்ன?

சத்ரபதி சிவாஜி மகாராஜா மகாராஷ்டிரா முழுவதும் கோட்டைகளைக் கட்டினார். இக்கோட்டைகள் இன்றைக்கும் சுற்றுலா மையங்களாகவும், சத்ரபதி சிவாஜியின் பெயர் சொல்லும் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன.இந்நிலையில் மகார... மேலும் பார்க்க

ஏமாற்றிய காதலன்; பிரிந்த இளம்பெண்ணுக்கு அடுத்தநாளே கிடைத்த 11 லட்சம் ரூபாய் - எப்படி தெரியுமா?

அமெரிக்காவில் தன்னை ஏமாற்றிய காதலனை பிரிந்த பெண்ணிற்கு அடுத்த நாளே, அவருடைய காதலன் கொடுத்த பரிசு மூலம் 14,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 11.62 லட்சம் ரூபாய்) கிடைத்துள்ள சம்பவம், ஆச்சர்யத்தை ஏற... மேலும் பார்க்க