செய்திகள் :

RJ Balaji: `ரொம்ப கஷ்டமா இருக்கு..'- IPL கமென்ட்டரியில் இல்லாதது குறித்து மனம் திறந்த ஆர்.ஜே பாலாஜி!

post image

IPL திருவிழா இந்தியா முழுவதும் கலைகட்டி வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டை தொடர்ந்து கவனிக்காதவர்கள் கூட ஐபிஎல் போட்டிகளை ரசிக்கின்றனர். குறிப்பாக 2018ம் ஆண்டு பிராந்திய மொழிகளில் கிரிக்கெட் வர்ணனை தொடங்கியதிலிருந்து பலரும் கிரிக்கெட் ரசிகர்வட்டத்தில் இணைந்துள்ளனர்.

ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, இந்தி மொழிகளில் தொடங்கப்பட்டு இப்போது மலையாளம், குஜராத்தி, மராத்தி என பல மொழிகளில் செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்தில் தோனி, பிராந்திய மொழி வர்ணனை கிரிக்கெட்டை ரசிகர்களுடன் ஆழமாக இணைப்பதாகப் பேசியிருந்தார்.

Dhoni

அப்படி தமிழ்மொழி வர்ணனை மூலம் கிரிக்கெட் ரசிகர்களின் அன்பைப் பெற்ற வர்ணனையாளர் ஆர்.ஜே.பாலாஜி. ஐபிஎல் 2025 சீசனில் அவர் வர்ணனை செய்யாதது பலருக்கும் ஏமாற்றமாக இருந்தது.

இந்தநிலையில் இதுகுறித்து இன்ஸ்டாகிராம் வீடியோவில் பேசியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

RJ Balaji வீடியோ

"வருடத்தில் மார்ச் கடைசி, ஏப்ரல், மே மாதங்கள் தான் எனக்கு மிகவும் பிடித்த நேரம். எனக்கு மிகவும் பிடித்த வேலையான ஐபிஎல் கிரிக்கெட் கமென்ட்டரி செய்வேன். உங்களுக்கும் அது ரொம்ப பிடிக்கும்.

நேற்று படப்பிடிப்பில் இருந்தபோது கூட நிறையபேர் 'அண்ணே நாளைக்கு வந்துடுவீங்கல்ல?' எனக் கேட்டனர். அவர்களுக்கான பதில்தான் இது, இந்த ஆண்டு ஐபிஎல் கமென்ட்டரியில் நான் வரமாட்டேன்.

இது எனக்கும் ரொம்ப கஷ்டமாதான் இருக்கு. நானும் உங்களை மிஸ் பண்ணுவேன்.

RJ Balaji

ஆனால் ஒரு நேரத்தில் ஒரு வேலையை செமயா செய்யணும்னு நினைப்பேன். அதனால் இப்ப ஒரு வேலை செய்துகிட்டு இருக்கேன், நான் ஒரு படமும் இயக்க வேண்டும். நிறைய பொறுப்பு இருக்குறதால, இந்த வருஷம் ஐபிஎல்லுக்கு சின்ன நிறுத்தம் கொடுத்திருக்கிறேன்.

இதை சொல்வதே எனக்கு கடினமாக இருக்கிறது. இது எனக்கு மிகவும் பிடித்த வேலை, கடந்த 8, 10 வருஷமா நீங்கள் எல்லாரும் எனக்கு கொடுத்த லவ், 'நேத்து ஏன் வரல, நாளைக்கு வருவீங்களா' எனக் கேட்கும்போதும், ஒவ்வொருமுறை அந்த மைக் எடுக்கும்போதும் ஏற்படும் உணர்வு சிறப்பானது.

இது ஒரு சின்ன நிறுத்தம்தான். நானும் உங்களைப்போல ஹூடி பாபா மந்திரம் போட்டு வீட்டில் இருந்து சி.எஸ்.கே-க்கு சப்போர்ட் செய்வேன்.

இந்த ஷுட்டிங் எல்லாம் முடிந்தபிறகு, அடுத்த சீசனில் பார்ப்போம்" எனப் பேசியுள்ளார்.

RJ Balaji இயக்கும் நடிகர் சூர்யாவின் 45வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்துவருவது குறிப்பிடத்த

க்கது.

Dhoni: "தோனிக்கெதிராக இவ்வாறு செய்யக் கூடாது; அவர் ஒய்வுபெற்றால்..." - கெயில் கூறுவது என்ன?

ஆர்.சி.பி-க்கெதிரான போட்டியில் 13 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து வெற்றிக்கு 100+ ரன்கள் தேவை என்று சிஎஸ்கே தத்தளித்த நேரத்தில், தோனி இறங்காமல் அஸ்வின் இறக்கப்பட்டது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய விவ... மேலும் பார்க்க

CSK vs DC: "தயவுசெய்து இவரை மட்டும் ப்ளேயிங் 11இல் எடுக்காதீர்கள்" - சிஎஸ்கே-க்கு ஹர்பஜன் வார்னிங்

ஐ.பி.எல்-இல் இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் வெற்றிபெற்ற சி.எஸ்.கே அணி,... மேலும் பார்க்க

MI vs KKR: "அஸ்வனி குமாரின் அந்த விக்கெட் மிக முக்கியமானது" - வெற்றிக்குப் பின்னர் ஹர்திக் பாண்டியா

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதல... மேலும் பார்க்க

MI vs KKR: `எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம்' - விளக்கும் கொல்கத்தா கேப்டன் ரஹானே

கொல்கத்தா அணிக்கும் மும்பை அணிக்கும் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த மும்பை அணி, 16.2 ஓவர்களில் ... மேலும் பார்க்க

Ashwani Kumar: பஞ்சாப் தவறவிட்ட மாணிக்கம்; பட்டை தீட்டிய பல்தான்ஸ்; யார் இந்த அஸ்வனி குமார்?

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎ... மேலும் பார்க்க

Ashwani Kumar: "கடின உழைப்பால் இங்கு நிற்கிறேன்" - MI vs KKR போட்டி ஆட்டநாயகன் அஸ்வனி குமார்

மும்பை vs கொல்கத்தா ஐபிஎல் போட்டி வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்றது. இதில், டாஸ் வெனறு பவுலிங்கைத் தேர்வு செய்த ஹர்திக் பாண்டியா & கோ, கொல்கத்தாவை 16.2 ஓவர்களில் 116 ரன்களுக்குச்... மேலும் பார்க்க