செய்திகள் :

Salman Khan: ``என் வாழ்க்கை கடவுள் கையில்'' - லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் குறித்து சல்மான் கான்

post image

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு டெல்லியைச் சேர்ந்த மாபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்து வந்தான். இதனால் சல்மான் கானின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளியில் சென்றால் பாதுகாவலர்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்போடு செல்வது வழக்கம்.

சல்மான் கான் வீட்டின் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கியால் சுட்டனர். அதோடு சல்மான் கான் பண்ணை வீட்டிற்குச் செல்லும்போதும் கொலை செய்ய முயன்றனர்.

இப்போது நடிகர் சல்மான் கான் சிகந்தர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது சல்மான் கான் சிகந்தர் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிஸியாக இருக்கிறார்.

படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சல்மான் கானிடம் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ''எனது வாழ்க்கை கடவுள் கையில் இருக்கிறது. எல்லாம் கடவுள், அல்லா பார்த்துக்கொள்வார். என்ன எழுதப்பட்டுள்ளதோ எழுதப்பட்டதுதான். அவ்வளவுதான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

சல்மான் கான்

ஒரு முறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பது குறித்து சல்மான் கான் அளித்த பேட்டியில், ''சில நேரங்களில் அதிகமானோர் நம்மை சுற்றி வருவது கூட பிரச்னையாக இருக்கிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

சல்மான் கான் ராஜஸ்தானிற்கு படப்பிடிப்புக்குச் சென்றபோது அபூர்வ வகை மானை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் இருந்து சல்மான் கான் விடுவிக்கப்பட்டுவிட்டார். ஆனால் அந்த மான்களை பிஷ்னோய் இன மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். எனவே மான்களை வேட்டையாடிய காரணத்திற்கு சல்மான் கான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை விடுத்து கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

சிக்கந்தர் : 'இந்தப் படத்தில் பணியாற்றியது கனவு போல் இருக்கிறது' - நெகிழும் சந்தோஷ் நாராயணன்

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'சிக்கந்தர்'. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் சி... மேலும் பார்க்க

`ஒரு பாட்டில் ரூ.6300' - நடிப்பு, கிரிக்கெட்டை தொடர்ந்து மது விற்பனையிலும் ஷாருக்கான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திரைப்படங்களில் நடிப்பதோடு படங்களை தயாரிப்பது, ஐ.பி.எல். கிரிக்கெட் என பல தொழில்களை செய்து வருகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் தொழில்கள் அனைத்துமே வெற்றிகரமாக அமைந்து வருகிறது.... மேலும் பார்க்க

Sikandar: 4000 பேரில் 5 பேர் தேர்வு; படத்தில் நடித்த குழந்தைகளை ஆச்சரியப்படுத்திய சல்மான் கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்த சிகந்தர் படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இப்படத்தில் 5 குழந்தைகள் நடித்திருந்தனர். அவர்களைத் தேர்வு செய்ய 4 ஆயிரம் குழந்தைகளை ஒத்திகைக்காக அழைத்திருந்தனர். பல ந... மேலும் பார்க்க

Sikandar: வெளியாவதற்கு முன்பே டெலிகிராமில் லீக் ஆன சல்மான் கான் திரைப்படம் - ரசிகர்கள் அதிர்ச்சி!

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று திரையரங்குகளில் வெளியானது சல்மான் கானின் சிக்கந்தர் திரைப்படம். வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே ஆன்லைனில் பல பைரேட்டட் வலைதளங்களில் இந்த படம் கிடைப... மேலும் பார்க்க

"ரஜினி, சிரஞ்சீவி, சூர்யா படங்கள அங்க பார்க்குறோம்; ஆனா எங்க படங்கள இங்க..." - சல்மான் கான் ஆதங்கம்

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட்டில் 'சிக்கந்தர்' படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் சல்மான் கானும், ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருகின்றனர். நாளை ( மார்ச் 30) இத்திரைப்படம் வெளியாக இருக்கும் ... மேலும் பார்க்க

Krrish 4: ஹ்ரித்திக் ரோஷனின் க்ரிஷ் 4 படத்தை இயக்கப்போவது இவர்தான்; வெளியான செம அப்டேட்!

இந்தியாவில் எடுக்கப்பட்ட சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் மிகவும் முக்கியமானது க்ரிஷ். இந்த படத்தின் நான்காவது பாகம் குறித்து சமீபத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.க்ரிஷ் படத்தின் முதல் 3 பாகங்களை ராக்கேஷ் ரோஷ... மேலும் பார்க்க