செய்திகள் :

Uber: 'இனி கட்டணத்தை நாங்கள் சொல்லமாட்டோம்; நீங்களே பேசிக்கொள்ளுங்கள்!' - என்ன சொல்கிறது ஊபர்?!

post image

'இனி நாங்கள் கட்டணத்தை நிர்ணயிக்கமாட்டோம்...நீங்களே பேசிக்கொள்ளுங்கள்' என்று ஊபர் நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதாவது இதுவரை ஊபரில் பயணம் செய்தவர்கள் ஆப்பில் பைக், கார் அல்லது ஆட்டோவை புக் செய்வார்கள். அந்த ஆப்பில் காட்டும் கட்டணத்தொகையை பயணி ஓட்டுநருக்கு தர வேண்டும். இந்தக் கட்டணத்தில் ஆப்பிற்கான சேவை கட்டணம், ஓட்டுநருக்கான கட்டணம் போன்றவை அடங்கும்.

ஆனால், இனி ஓட்டுநர்கள் மாதா மாதம் குறிப்பிட்ட ஒரு தொகையை ஊபர் நிறுவனத்திற்கு கட்ட வேண்டிய சப்ஸ்கிரிப்ஷன் முறையை அறிமுகப்படுத்துகிறது.

சொல்லமாட்டோம்; பேசிக்கொள்ளுங்கள்!

இதனால், ஊபர் நிறுவனம் ஓட்டுநர்களுக்கும், பயணிகளுக்கு கட்டணத்தொகையை பரிந்துரைக்க மட்டுமே செய்யும். அதன் பிறகு 'எத்தனை ரூபாய்க்கு சவாரி?' என்பது ஓட்டுநரும், பயணியும் தான் பேசிக்கொள்ள வேண்டும்.

இது குறித்து ஊபர் நிறுவனம் நேற்று அறிக்கை வெளியிட்டது.

ஆனால், இந்த முறையில் ஓட்டுநர்கள் மாதம் எவ்வளவு கட்டணம் கட்ட வேண்டும் என்பதை ஊபர் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

இந்த நடைமுறை மூலம் இனி ஆப்பில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் கட்டணம் கட்ட முடியாது. நேரடியாகத்தான் ஓட்டுநர்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

கருப்பு மணல் கொண்ட அழகிய கடற்கரைகள்; சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது எதனால்?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் செல்லக்கூடிய இடம் கடற்கரை. அதிலருக்கும் மணலில் அமர்ந்து கடல் அலைகளை ரசிப்பதே தனிசுகம். அங்கு இருக்கும் மணல்கள்தான் கடற்கரைக்கே அழகு சேர்க்கும் என்... மேலும் பார்க்க

உலகில் `V' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டது 4 நாடுகள் மட்டும்தானா? -wow Facts

உலகில் உள்ள 195 நாடுகளில், நான்கு நாடுகளின் பெயர்கள் மட்டுமே 'V' என்ற எழுத்தில் தொடங்குகின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அந்த நாடுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.வனுவாட்டுதென் பசிபிக் பெர... மேலும் பார்க்க

கோவை: அட்டகாச பட்ஜெட் சுற்றுலா - இயற்கையுடன் வீக்எண்டை செலவிட ஷ்பெஷல் ஸ்பாட்; ஆனால்..!

பரளிக்காடு!மூலிகை குளியல், பரிசல் சவாரி, பிடித்த உணவு வகைகளுடன் ஒரு சுற்றுலா தலம் கோவையில் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. பரளிக்காடு பற்றி தான் சொல்லபோகிறோம். Baralikaadu ECO Tourismகோவையில் இர... மேலும் பார்க்க

தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே தோன்றும் இந்திய தீவு - எங்கே நிகழ்கிறது இந்த அதிசயம்?!

கொங்கண் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் சீகல் தீவு, தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே தோன்றும் ஒரு தனித்துவ தீவாக அடையாளம் பெற்றுள்ளது. இந்த தீவு குறித்து விரிவாக இங்கே தெரிந்து கொள்ளலாம்!மகாராஷ்டிராவின்... மேலும் பார்க்க

Toll passes: நெடுஞ்சாலை பயணம் செல்பவர்களா? ஆண்டுக்கு ரூ.3000, லைஃப் டைம் ரூ.30,000 -எது லாபம்?

சாலை பயணங்களில் தவிர்க்க இயலாத ஒன்று சுங்கச் சாவடி கட்டணம். தொழில் ரீதியாக அடிக்கடி பயணிப்போர், சொந்த காரணங்களுக்காக பயணம் மேற்கொள்வோர் என யாராக இருந்தாலும் சுங்கச் சாவடிகளை கடக்காமல் செல்ல இயலாது. இந... மேலும் பார்க்க