செய்திகள் :

Ukraine: துருக்கி சென்றடைந்த ஜெலன்ஸ்கி; நேரில் வராத புதின் - அமைதி பேச்சுவார்த்தை பலனளிக்குமா?

post image

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் இன்று துருக்கியில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். இதற்காக துருக்கி சென்றடைந்துள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. ஆனால் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பேச்சுவார்த்தையில் பங்குபெறவில்லை.

புதின் கலந்துகொள்ளாதது உக்ரைனை இழிவுபடுத்துவதாக பார்க்கப்படுவதுடன், ரஷ்யா போரை நிறுத்துவதில் தீவிரமாக இல்லை என மேற்கத்திய நாடுகள் விமர்சித்துள்ளன. புதின் நேரில் கலந்துகொள்வார் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கலந்துகொள்ளாததால் உலக தலைவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Putin
Putin

"ரஷ்ய அதிகாரிகள் அலங்காரமாகவே செயல்படுவர்" என துருக்கி விமான நிலையத்தில் அளித்த செய்தியாளர் சந்திப்பில் விமர்சித்துள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. மேலும், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் உடனான சந்திப்புக்குப் பிறகே அடுத்த பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் குறித்து பேச முடியும் என்றும் கூறியுள்ளார்.

புதினுக்கு பதில் கலந்துகொள்வது யார்?

புதினுக்கு நம்பகமானவரும் வரலாற்று ஆசிரியருமான விளாதிமிர் மெடின்ஸ்கி என்பவரின் தலைமையிலான அணியை அனுப்பியுள்ளது.

மெடின்ஸ்கி பழைமைவாத மற்றும் தேசியவாத நோக்கில் ரஷ்யாவின் வரலாற்றை மறுவரையரை செய்பவர். இவரது வரலாற்று புத்தகங்கள் உக்ரைன் ஒரு நாடாக இருப்பதையே புறக்கணிக்கின்றன.

இவரது பழைமைவாத மற்றும் நாட்டுப்பற்றை ஊட்டும் எழுத்துகளால், புதினுக்கு விருப்பமான அதிகாரியாக உயர்ந்துள்ளார். இவருடன் நான்கு கீழ்நிலை அதிகாரிகளை நிபுணர்கள் என அனுப்பி வைத்துள்ளது ரஷ்யா.

Medinsky with putin
Medinsky with putin

அமைதியின் அத்தியாயம் தொடங்கும் - துருக்கி நம்பிக்கை!

இந்த வார தொடக்கத்தில் ரஷ்ய அதிபர் புதின் நேரில் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சவால் விடுத்திருந்தார் ஜெலன்ஸ்கி. "நான் துருக்கிக்கு செல்கிறேன், புதினின் வருகைக்காக காத்திருப்பேன்" எனப் பேசியிருந்தார். ஆனால் புதின் எப்போதும் நேரில் வருவதாகப் பேசவில்லை.

புதினும் ஜெலன்ஸிகியும் நேரில் சந்தித்து பேச வேண்டும் என அழுத்தம் கொடுத்துவந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "புதின் நேரில் வராதது ஆச்சர்யமளிக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.

"நான் அங்கு இல்லாதபோது புதின் நேரில் வருவது நடக்காத காரியம்தான்" எனக் கூறியுள்ளார் அதிபர் ட்ரம்ப்.

trump
Donald Trump - டொனால்டு ட்ரம்ப்

இந்த பேச்சுவார்த்தை 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் போரின் சொல்லிமாளாத துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதிய தொடக்கமாக இருக்கும் என நம்பிக்கைத் தெரிவித்து வருகின்றனர் துருக்கி வெளியுறவுத்துறை அதிகாரிகள்.

ஆனால் புதின் நேரில் வராமல் பேச்சுவார்த்தை மேசையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமரமாட்டார் என உக்ரைன் அதிபர் அலுவலக ஆலோசகர் மிகைலோ பொடோலியாக் கூறியுள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரை பிரநிதிகள் எந்த இடத்தில் சந்தித்துக்கொள்ளப் போகின்றனர், சரியாக எந்த நேரத்தில் பேச்சுவார்த்தைத் தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இருநாட்டு அதிபர்கள் கலந்துகொள்ளாத பேச்சுவார்த்தை போரில் அமைதியை எட்டுவதற்கு பயனளிக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாக எழுந்துள்ளது!

Supreme Court -க்கு Droupadi Murmu -ன் 14 கேள்விகள்- Stalin கண்டனம் | BJP |Imperfect Show 15.5.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* AIR FORCE விமானத்தில் பறந்தபடி மீண்டும் ட்ரம்ப் பேச்சு!* பகல்காம் தாக்குதல்: ஐ.நாவிடம் ஆதாரத்தைக் கொடுத்து இந்தியா!* The Resistance Front - ஐ.நா-வில் இந்தியா முறையீடு?*... மேலும் பார்க்க

Turkey: 'நோ பர்மிஷன்' - பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி; இந்தியாவின் நடவடிக்கை!

கடந்த மே 7 டு மே 10-ம் தேதி இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே இருந்த பதற்ற நிலையில், பாகிஸ்தானுக்கு மிகுந்த ஆதரவை வழங்கியிருந்தது துருக்கி. இதற்கு பதிலடி தருவது போல, இந்தியாவில் உள்ள துருக்கி நிறுவனத்தின... மேலும் பார்க்க

`பிரதமர் மோடியின் போர் ராஜ தந்திரத்தை உலக நாடுகள் பாராட்டுகின்றன!’ – புகழும் புதுச்சேரி அதிமுக

புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் பதவியேற்றதில் இருந்து, அரசு அனுப்பும் அனைத்து மக்கள் நலத்திட்டங... மேலும் பார்க்க

Trump: "இந்தியா - பாக். பிரச்னையை நான்தான் சரிசெய்தேன் என்று கூறவில்லை, ஆனால்..." - ட்ரம்ப்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியான இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூருக்கு' பின், பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு, இந்தியாவும் தாக்குதல் நடத்த... இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மிகுந்த ... மேலும் பார்க்க

`ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய சல்யூட்; பாகிஸ்தானால் இதை மறக்க முடியாது!' - ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஶ்ரீநகரில் ராணுவ வீரர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது..."உங்களை (ராணுவ வீரர்கள்) காண்பதில் நான் பெருமை கொள்கிறேன். பிரதமர்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: அரசு மருத்துவமனையில் மது போதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை; வெளியேற்றப்பட்ட மருத்துவர்!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள், உள் மற்றும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற... மேலும் பார்க்க