செய்திகள் :

US: மார்டின் லூதர் கிங் கொலை ஆவணத்தை வெளியிட்ட ட்ரம்ப் அரசு; அவரது மகன், மகள் கூறுவது என்ன?

post image

மார்டின் லூதர் கிங் - அமெரிக்காவின் சிவில் உரிமை ஆர்வலர்.

டென்னசி மெம்பிஸில், 1968-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், மார்டின் லூதர் கிங் சுட்டு கொல்லப்பட்டார்.

இவரது கொலை சம்பந்தமான ஆவணத்தை நேற்று ட்ரம்ப் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்த ஆவணம் 2,30,000 பக்கங்களைக் கொண்டது ஆகும்.

ட்ரம்ப் - துளசி கப்பார்டு
ட்ரம்ப் - துளசி கப்பார்டு

துளசி கப்பார்ட்டின் கூற்று

இது குறித்து, தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், "டாக்டர் மார்டின் லூதர் கிங் கொலை விசாரணையை முழுவதும் தெரிந்துகொள்ள அமெரிக்க மக்கள் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் காத்திருந்தனர்.

நாட்டின் மிக முக்கிய துயர சம்பவமான மார்டின் லூதர் கிங் கொலை குறித்து மக்கள் முழுவதுமாக, வெளிப்படை தன்மையுடன் தெரிந்துகொள்ள வேண்டும்.

கிட்டத்தட்ட 2.3 லட்ச ஆவண பக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சில ஆவணங்கள் மட்டுமே பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை" என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

மார்டின் லூதர் கிங் மகன், மகள் கூறுவது என்ன?

மார்டின் லூதர் கிங்கின் மகன் மார்டின் லூதர் கிங் III மற்றும் பெர்னிஸ் கிங், "நாங்கள் வெளிப்படைத் தன்மைக்கும், உண்மைக்கும் ஆதரவு தருகிறோம். ஆனால், இந்த ஆவணம் எங்களது தந்தையின் பெயரை கெடுக்கலாம்.

காரணம், அப்போதைய எஃப்.பி.ஐ இயக்குநர் எட்கர் ஹூவர் எங்கள் தந்தையின் பெயரையும், அவரது சிவில் உரிமை போராட்டத்தையும் கெடுக்க முயன்று வந்தார்.

அதனால், இந்த ஆவணத்தைப் படிப்பவர்கள் எங்கள் குடும்பத்தை மனதில் கொண்டும், மரியாதையுடனும் படியுங்கள்" என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்

மார்ட்டின் லூதர் கிங்
மார்ட்டின் லூதர் கிங்

புதிது அல்ல...

ட்ரம்ப் அரசாங்கம் இந்த மாதிரியான ஆவணங்களை வெளியிடுவது புதிது அல்ல.

கடந்த மார்ச் மாதம், ஜான் எஃப்.கென்னடி கொலை ஆவணம், கடந்த ஏப்ரல் மாதம் ராபர்ட் எஃப்.கென்னடி கொலை ஆவணத்தையும் வெளியிட்டது.

Tanzania: 3,000 ஆண்டுகள் பழமையான மரங்கள் தன்சானியாவில் கண்டுபிடிப்பு.. ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு, தான்சானியா. இங்கு, இதுவரை மனிதர்களால் பார்க்கப்படாத, சுமார் 3000 ஆண்டுகள் பழமையான மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வின் போது, இத்தாலிய... மேலும் பார்க்க

`5 லட்சம் மலர் செடிகள் பூத்து, கண்களுக்கு விருந்து படைக்கும்..' - சீசனுக்கு தயாராகும் ஊட்டி பூங்கா

ஊட்டியில் தேனிலவு சீசன் எனப்படும் இரண்டாம் கட்ட சீசன் ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. மே மாத கோடை சீசனுக்கு அடுத்தபடியாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் நடத்தப்படும்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `அரசு வேலை' ஆசை காட்டி மோசடி; சுருட்டிய பணத்தில் சமூக ஆர்வலராக வலம் வந்த பாஜக பிரமுகர்!

`மத்திய அமைச்சர் மூலமாகவே மூவ் செய்கிறோம்’புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் கிளை காரைக்கால் கோயில்பத்து பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை இன்னும் சி... மேலும் பார்க்க

`அரசியலில் எங்கோ, ஏதோ ஒன்று நடக்கிறது..' -ஜக்தீப் தன்கர் ராஜினாமா குறித்து காங். தலைவர் ஹரிஷ் ராவத்

நேற்று துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இது குறித்து உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ஹரிஷ் ராவத், "இந்த செய்தி மிகவும் அதிர்ச்ச... மேலும் பார்க்க

Doctor Vikatan: உட்காரும் இடத்தில் வலி; மூலநோயும் இல்லை... வலிக்கு காரணம், தீர்வு என்ன?

Doctor Vikatan: என் வயது 34. ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறேன். எனக்கு கடந்த சில தினங்களாக உட்காரும் இடத்தில் கடுமையான வலி இருக்கிறது. அது மூலநோய் இல்லை என்பதுஉறுதி. டெயில்போன் வலியாகஇருக்கலாம் என்கிற... மேலும் பார்க்க