செய்திகள் :

Yercaud Express: ரயிலைக் கவிழ்க்கச் சதி? தனிப்படைகள் அமைத்து ரயில்வே காவல்துறை விசாரணை;பின்னணி என்ன?

post image

ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இரவு 9 மணிக்குத் தினசரி ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள மகுடஞ்சாவடி ரயில் நிலையத்திற்கு 2 கிலோ மீட்டர் முன்பு வந்துகொண்டிருந்தது.

ரயிலைக் கவிழ்க்க சதி
ரயிலைக் கவிழ்க்க சதி

அப்போது, ரயில் தண்டவாளத்தின் குறுக்கே வைக்கப்பட்ட ராட்சத இரும்பு கம்பி ரயில் இன்ஜினில் மோதி இன்ஜின் பழுதடைந்தது.

இதனை எதிர்பார்க்காத ரயில் ஓட்டுநர் சாதுரியமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் ரயில்வே பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில், ரயில் பயணிகள் சுமார் மூன்று மணி நேரமாக கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இதனையடுத்து ரயில்வே துறை அதிகாரிகள் விரைந்து வந்து பழுதடைந்த ரயில் இன்ஜினைச் சரி செய்ய முயன்றனர். ஆனால், இன்ஜினில் ஏற்பட்ட பழுது சரியாகாததால், மாற்று இன்ஜினை வரவழைத்து ரயிலை அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, ரயில் தண்டவாளத்தில் ராட்சத இரும்பு கம்பியை வைத்து ரயிலைக் கவிழ்க்கச் சதி செய்யப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் ரயில்வே காவல்துறையினர், மோப்ப நாய் குழுவினர் வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இரும்பு கம்பிகள் வைத்தது சதி வேலையா என்பதைக் கண்டறிய ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாபு தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில்
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில்

இதில் காவல் ஆய்வாளர்கள் சிவசெந்தில்குமார், சாய்த்திரி ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, இந்தச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஒவ்வொரு கிராமங்களாகச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் தொடர்ந்து இப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Plane Crash: சம்பவ இடத்தில் 800 கிராம் தங்கம், 80,000 ரூபாய் பணம், பகவத் கீதை, பாஸ்போர்ட் மீட்பு

கடந்த ஜூன் 12-ம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்துச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 240 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து நிகழ்ந்த 5 நிமிடங்களுக்குள் விபத்தில் சிக்கியவர... மேலும் பார்க்க

Plane crash: பலியான ஏர் இந்தியா ஊழியர்களுக்கு இறுதிச்சடங்கு; மும்பையில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான விமான கேப்டன் சுமீத் சபர்வால் உடல் இன்று அதிகாலை மும்பைக்கு சிறப்பு விமானத்தில் கொண்டு வரப்பட்டது. அவரது உடல் இன்று மும்பை பவாயில் உள்ள அவரது இல்... மேலும் பார்க்க

திருப்பூர்: இருசக்கர வாகனத்தின் மீது கவிழ்ந்த கன்டெய்னர் லாரி; தாய், மகளுக்கு நேர்ந்த சோகம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகர்ப் பகுதியில் நால்ரோடு சந்திப்பில் கன்டெய்னர் லாரி ஒன்று கோவையிலிருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது.பல்லடம் நகராட்சி அலுவலகம் அருகே எதிர்பாராத விதமாகக் கட்டுப்பா... மேலும் பார்க்க

MV Won Hai 503: 8 நாள்களாக எரியும் தீ; ஆழ்கடலில் விடப்பட்ட கப்பல்; கேரள கடலோர மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை துறைமுகம் நோக்கிச் சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த எம்.வி வான் ஹாய் 503 என்ற சரக்கு கப்பல் கடந்த 9-ம் தேதி தீப்பிடித்து எரிந்தது.கேரள மாநிலம் கண்ணூர் அழிக்கால் மீன்பிடி... மேலும் பார்க்க

Kantara Chapter 1: "மழை, காற்று, பயம்..." - நீந்திப் பிழைத்த படக்குழு; அனுமதியில்லாமல் படப்பிடிப்பா?

கன்னட படமான காந்தாரா: சேப்டர்1 படப்பிடிப்பின்போது தொடர்ந்து புதுப்புது சவால்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே இப்படப்பிடிப்பின் போது கடந்த ஒரு மாதத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 3 ஊழியர்கள் பல... மேலும் பார்க்க

Ahmedabad plane crash: ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் - சாவின் விளிம்புவரை சென்று உயிர் தப்பிய 7 பேர்

அகமதாபாத் விமான விபத்தில் 274 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இக்கொடூரமான விபத்தில் 7 பேர் கடைசி நேரத்தில் தங்களது பயணத்தை ரத்து செய்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றனர். தாய் வைத்த அன்பு கோரிக்கை... மேலும் பார்க்க