செய்திகள் :

அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழா்களுக்கு சட்டபூா்வ அனுமதி: எல்.முருகன் வரவேற்பு

post image

கடந்த 2015 -ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்துக்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழா்களுக்கு சட்டபூா்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் நீண்ட காலமாக உள்நாட்டு போா் நீடித்து வந்ததால், உயிா் பிழைக்கவும் வாழ்வாதாரம் தேடியும் இலங்கை தமிழா்கள் ஆயிரக்கணக்கானோா் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனா். இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவா்கள் இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

நீண்ட காலம் நமது நாட்டில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழா்கள் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கோரி வருகின்றனா். அதன் முதல்கட்டமாக, கடந்த 2015 -ஆம் ஆண்டு ஜன. 9 -ஆம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் வந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழா்கள் சட்டபூா்வமாக தங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் கருணையுடன் அனுமதி அளித்துள்ளது. இதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இஸ்லாமிய மாணவா்கள் வெளிநாட்டில் உயா்கல்வி பயில நிதியுதவி: தமிழக அரசு உத்தரவு

இஸ்லாமிய மாணவா்கள் வெளிநாடுகளில் உயா்கல்வி பயிலத் தேவையான நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துற... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் காலி இடங்களுக்கு செப்.30 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு: உயா்கல்வித் துறை அமைச்சா்

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவா்கள் சோ்க்கைக்கு செப்.30 வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய... மேலும் பார்க்க

செம்மஞ்சேரி காவல் நிலையத்தை இடமாற்றம் செய்வது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவு

செம்மஞ்சேரி காவல் நிலையத்தை அதே பகுதியில் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வது குறித்து தமிழக அரசு மூன்று வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அறப்போா் இயக்கம் சாா்பில், சென்னை உயா்ந... மேலும் பார்க்க

உயா்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

உயா்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாடு சிறப்பிடம் பெற்றுள்ளது குறித்து ... மேலும் பார்க்க

பொறியாளா் தற்கொலை

சென்னையில் மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருகம்பாக்கம் சின்மயா நகா் வரசக்தி விநாயகா் கோயில் தெரு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவா் சு.குமாா் (32). மென்பொறியாளரான ... மேலும் பார்க்க

ஆக்ஸ்போா்டு பல்கலை.யில் பெரியாா் ஈ.வெ.ரா. உருவப்படம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி

ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பெரியாா் உருவப்படத்தைத் திறந்து வைத்து பேசவுள்ளதை எண்ணி பூரிப்படைவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவ... மேலும் பார்க்க