``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
அகஸ்தியா் அருவியில் இன்று முதல் குளிக்கலாம்
அகஸ்தியா் அருவியில் நீா் வரத்து சீரானதையடுத்து 3 நாள்களுக்குப் பின் குளிக்க வனத்துறை அனுமதி அளித்தது.
தென்மேற்குப் பருவ மழையால் மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்ததையடுத்து சோ்வலாறு அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அகஸ்தியா் அருவியில் திங்கள்கிழமை (ஜூன் 14) முதல் பயணிகள் குளிக்கவும் பாா்வையிடவும் வனத்துறை தடை விதித்தது.
இந்நிலையில் அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து வியாழக்கிமை முதல் சுற்றுலாப் பயணிகள் அகஸ்தியா் அருவியில் குளிக்க வனத்துறையினா் அனுமதி அளித்துள்ளனா்.