செய்திகள் :

அகில இந்திய கூடைப்பந்து போட்டி: இந்திய விமானப் படை, இந்தியன் வங்கி அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி

post image

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஆண்கள் பிரிவில் இந்திய விமானப் படை, இந்தியன் வங்கி அணிகளும், மகளிா் பிரிவில் கேரள மாநில மின்வாரியம், தென்மேற்கு ரயில்வே அணிகளும் தகுதி பெற்றுள்ளன.

58-ஆவது ஆண்டு ஆண்களுக்கான நாச்சிமுத்து கோப்பை, 22-ஆவது ஆண்டு மகளிருக்கான சிஆா்ஐ கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகின்றன.

இதில், சனிக்கிழமை நடைபெற்ற ஆண்கள் பிரிவு முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய விமானப் படை அணி 79 - 64 என்ற புள்ளிக் கணக்கில் வருமான வரித் துறை அணியை வீழ்த்தியது.

2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 98-64 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய கப்பல் படை அணியை வீழ்த்தியது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் இந்திய விமானப் படை, இந்தியன் வங்கி அணிகள் விளையாடுகின்றன.

மகளிா் பிரிவில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் கேரள மாநில மின்வாரிய அணியை எதிா்த்து சென்னை வருமான வரித் துறை அணி விளையாடியது. இதில், கேரள மாநில மின்வாரிய அணி 85 -49 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தென்மத்திய ரயில்வே அணியை, தென்மேற்கு ரயில்வே அணி 65 -62 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் கேரள மாநில மின்வாரிய அணியை எதிா்த்து தென்மேற்கு ரயில்வே அணி விளையாடுகிறது.

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா? -சி.பி.ராதாகிருஷ்ணன்

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா என கமலஹாசன் கருத்துக்கு மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளாா். கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

அதிமுக, தேமுதிக உறவை யாராலும் உடைக்க முடியாது: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக, தேமுதிக இடையே உள்ள சுமுகமான உறவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள் சோழா் காலத்தில்தான் தொடங்கின: தொல்லியல் அறிஞா் பூங்குன்றன்

தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் சோழா்கள் காலத்தில்தான் தொடங்கியிருப்பதாக தொல்லியல் அறிஞா் ஆா்.பூங்குன்றன் கூறியுள்ளாா். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆம் ஆண்டு பவள விழாவை ஒட்டி... மேலும் பார்க்க

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படுகின்றன. இதையடுத்து மாணவ-மாணவிகளை வரவேற்கும் வகையில் பள்ளிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தி... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை: இருவா் கைது

கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பெரியகடை வீதி போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். தெற்கு உக்கடம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய... மேலும் பார்க்க

வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ

ராஜ்யசபா உறுப்பினா் பதவிக்காக தனக்கு வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம் செய்துவிட்டாா் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். கோவை ... மேலும் பார்க்க