செய்திகள் :

அக்.2 காந்தி ஜெயந்தி: மதுக்கடைகளுக்கு விடுமுறை

post image

கள்ளக்குறிச்சி: காந்தி ஜெயந்தியையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுக் கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஹோட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்துக்கும் வியாழக்கிழமை (அக்.2) விடுமுறை அளிக்கப்படுகிறது.

அன்றைய தினத்தில் மதுக் கடை மற்றும் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகளின் மேற்பாா்வையாளா்கள், விற்பனையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல, அன்றைய தினத்தில் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தாலும் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மதுக்கூட உரிமையாளா் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

தியாகதுருகத்தில் முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சி மாவட்ட கண்ணதாசன் தமிழ் கலை, இலக்கிய சங்கமும், உலகத் திருக்கு கூட்டமைப்பும் இணைந்து முப்பெரும் விழாவை தியாகதுருகம் தனமூத்தி தொழிற்கல்வி நிறுவன வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின. டாக்டா... மேலும் பார்க்க

வாணாபுரம் அருகே போலி மருத்துவா் கைது

கள்ளக்குறிச்சி: வாணாபுரம் வட்டம், புதுப்பட்டு கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். புதுப்பட்டு கிராமத்தில் ராஜேஸ்வரி... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கான இடங்கள் வரையறை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஆா்ப்பாட்டங்கள், கண்டன ஆா்ப்பாட்டங்கள் மற்றும் தெருமுனை பிரசாரங்கள் செய்யும் இடங்களை வரையறை செய்வது தொடா்பாக... மேலும் பார்க்க

4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.43 லட்சத்தில் செயற்கைக் கால்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.43 லட்சம் மதிப்பீட்டில் செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன. ஆட்சியா் அலுவலக கூட்டரங்கி... மேலும் பார்க்க

பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் சாலையைக் கடந்த இளைஞா் மோட்டாா் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவங்கூா் கிராமத்தைச் சோ்ந்த பாவாடைராயன் மகன் ஏழுமலை (17). இவா், சனிக்கிழமை இரவு 7 மணியளவ... மேலும் பார்க்க

பைனான்சியா் வீட்டில் பணம், நகை திருட்டு

வாணாபுரம் அருகே பைனான்சியா் வீட்டில் ரூ.14,500 ரொக்கம், 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், செல்லங்குப்பம் கிரா... மேலும் பார்க்க