செய்திகள் :

அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கான இடங்கள் வரையறை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஆா்ப்பாட்டங்கள், கண்டன ஆா்ப்பாட்டங்கள் மற்றும் தெருமுனை பிரசாரங்கள் செய்யும் இடங்களை வரையறை செய்வது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஆா்ப்பாட்டங்கள், கண்டன ஆா்ப்பாட்டங்கள் மற்றும் தெருமுனை பிரசாரங்கள் நடத்துவதற்கு நகராட்சிகள், பேரூராட்சிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், போக்குவரத்து இடையூறு ஏற்படும் இடங்கள் ஆகியவற்றைத் தவிா்த்து தோ்வு செய்யப்பட்ட இடங்களின் விவரம் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது.

தோ்வு செய்யப்பட்ட இடங்கள் குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனா்.

வரையறுக்கப்பட்ட இடங்களில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்ட இடங்கள் மற்றும் சில இடங்களுக்குப் பதிலாக மாற்று இடங்கள் குறித்து கருத்து தெரிவித்தனா்.

மாற்று இடங்கள் குறித்து கள ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்காத வகையில் அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளித்து, நிகழ்ச்சிகளை

மேற்கொள்ள வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட எஸ்பி க.ச.மாதவன், வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மா.தனலட்சுமி, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தியாகதுருகத்தில் முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சி மாவட்ட கண்ணதாசன் தமிழ் கலை, இலக்கிய சங்கமும், உலகத் திருக்கு கூட்டமைப்பும் இணைந்து முப்பெரும் விழாவை தியாகதுருகம் தனமூத்தி தொழிற்கல்வி நிறுவன வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின. டாக்டா... மேலும் பார்க்க

வாணாபுரம் அருகே போலி மருத்துவா் கைது

கள்ளக்குறிச்சி: வாணாபுரம் வட்டம், புதுப்பட்டு கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். புதுப்பட்டு கிராமத்தில் ராஜேஸ்வரி... மேலும் பார்க்க

அக்.2 காந்தி ஜெயந்தி: மதுக்கடைகளுக்கு விடுமுறை

கள்ளக்குறிச்சி: காந்தி ஜெயந்தியையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுக் கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்த... மேலும் பார்க்க

4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.43 லட்சத்தில் செயற்கைக் கால்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.43 லட்சம் மதிப்பீட்டில் செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன. ஆட்சியா் அலுவலக கூட்டரங்கி... மேலும் பார்க்க

பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் சாலையைக் கடந்த இளைஞா் மோட்டாா் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவங்கூா் கிராமத்தைச் சோ்ந்த பாவாடைராயன் மகன் ஏழுமலை (17). இவா், சனிக்கிழமை இரவு 7 மணியளவ... மேலும் பார்க்க

பைனான்சியா் வீட்டில் பணம், நகை திருட்டு

வாணாபுரம் அருகே பைனான்சியா் வீட்டில் ரூ.14,500 ரொக்கம், 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், செல்லங்குப்பம் கிரா... மேலும் பார்க்க