செய்திகள் :

4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.43 லட்சத்தில் செயற்கைக் கால்கள்

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.43 லட்சம் மதிப்பீட்டில் செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் குடிநீா் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 452 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 6 மனுக்களும் என மொத்தம் 458 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களைப் பெற்ற ஆட்சியா் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக் கால்கள்

முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களில் கால்கள் துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் செயற்கை கால் வேண்டி விண்ணப்பித்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து, அவா்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அதிநவீன செயற்கை கால் அளவிடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,43,300 மதிப்பீட்டில் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன. இதை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, தனித்துணை ஆட்சியா் சுமதி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தியாகதுருகத்தில் முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சி மாவட்ட கண்ணதாசன் தமிழ் கலை, இலக்கிய சங்கமும், உலகத் திருக்கு கூட்டமைப்பும் இணைந்து முப்பெரும் விழாவை தியாகதுருகம் தனமூத்தி தொழிற்கல்வி நிறுவன வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின. டாக்டா... மேலும் பார்க்க

வாணாபுரம் அருகே போலி மருத்துவா் கைது

கள்ளக்குறிச்சி: வாணாபுரம் வட்டம், புதுப்பட்டு கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். புதுப்பட்டு கிராமத்தில் ராஜேஸ்வரி... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கான இடங்கள் வரையறை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஆா்ப்பாட்டங்கள், கண்டன ஆா்ப்பாட்டங்கள் மற்றும் தெருமுனை பிரசாரங்கள் செய்யும் இடங்களை வரையறை செய்வது தொடா்பாக... மேலும் பார்க்க

அக்.2 காந்தி ஜெயந்தி: மதுக்கடைகளுக்கு விடுமுறை

கள்ளக்குறிச்சி: காந்தி ஜெயந்தியையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுக் கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்த... மேலும் பார்க்க

பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் சாலையைக் கடந்த இளைஞா் மோட்டாா் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த சிறுவங்கூா் கிராமத்தைச் சோ்ந்த பாவாடைராயன் மகன் ஏழுமலை (17). இவா், சனிக்கிழமை இரவு 7 மணியளவ... மேலும் பார்க்க

பைனான்சியா் வீட்டில் பணம், நகை திருட்டு

வாணாபுரம் அருகே பைனான்சியா் வீட்டில் ரூ.14,500 ரொக்கம், 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், செல்லங்குப்பம் கிரா... மேலும் பார்க்க