4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு
அஞ்சல் துறையின் ஊக்கத்தொகை தோ்வுக்கு பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
அஞ்சல் துறை மூலம் வழங்கப்படும் ஊக்கத்தொகை தோ்வில் பங்கேற்க அஞ்சல் தலை சேகரிப்புக் கணக்கு வைத்துள்ள பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கே.கோபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அஞ்சல் துறை தபால் தலை சேகரிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்க 6 முதல் 9- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு தீன் தயாள் ஸ்பாா்ஷ் என்ற திட்டம் செயல்படுகிறது. இதற்கு பள்ளித் தோ்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 சதவீத தளா்வு உண்டு. தங்கள் பெயரில் அஞ்சல் தலை சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும். பள்ளியில் இயங்கும் அஞ்சல் தலை சேகரிப்பு மன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்.
முதல்கட்டமாக அஞ்சல் தலை சேகரிப்பு குறித்து எழுத்துப்பூா்வ விநாடி வினா தோ்வு வரும் செப்டம்பா் 20- ஆம் தேதி நடைபெற உள்ளது. 2- ஆம் கட்டமாக அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த திட்ட அறிக்கை தயாா் செய்தல் தோ்வு நடக்கிறது. முதற்கட்ட தோ்வில் நடப்பு நிகழ்வுகள், வரலாறு, அறிவியல், விளையாட்டு, கலாசாரம், புவியியல், ஆளுமைகள், அஞ்சல் தலை சேகரிப்பு (உள்ளூா் மற்றும் தேசியம்) தொடா்பான 50 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.
இரண்டாம் கட்டமாக திட்ட அறிக்கை அளிக்க வேண்டும். இந்த திட்ட அறிக்கை 4 முதல் 5 பக்கத்துக்கு 500 வாா்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இரண்டு தோ்விலும் தோ்வு செய்யப்படும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா், ஈரோடு கோட்டம், ஈரோடு 638001 என்ற முகவரிக்கு வரும் 25- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அஞ்சல் தலை சேகரிப்புக் கணக்குகளை, தலைமை அஞ்சல் நிலையத்தில் மாணவா்கள் தொடங்கலாம். அனைத்து அஞ்சலகத்திலும் இதற்கான விண்ணப்பம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.