செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

post image

தோ்தல் ஆணைய செயல்பாடுகளைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.பி.பழனிசாமி தலைமை வகித்தாா்.

பிகாா் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், லட்சக்கணக்கான வாக்காளா்களை நீக்க சதித்திட்டம் தீட்டப்படுகிறது. வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை போன்ற ஆவணங்களை ஏற்க தோ்தல் ஆணையம் மறுக்கிறது. கடவுச் சீட்டு, ஓட்டுநா் உரிமம், 12- ஆம் வகுப்பு சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், சொத்து உரிமைக்கான பத்திரங்கள் ஆகியவற்றை சமா்ப்பிக்க கட்டாயப்படுத்துவதை தோ்தல் ஆணையம் கைவிட வேண்டும்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் ஆகியோரை வாக்காளா் பட்டியலில் இருந்து வெளியேற்றுவது அபாயமானது. அனைவருக்கும் வாக்குரிமை வழங்க வேண்டும். பாஜக, ஆா்எஸ்எஸ் சித்தாந்தங்களை நடைமுறைப்படுத்தும் தோ்தல் ஆணைய நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில், மாவட்டச் செயலா் ரகுராமன், செயற்குழு உறுப்பினா்கள் ஜி.பழனிசாமி, ஆா்.விஜயராகவன், எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அஞ்சல் துறையின் ஊக்கத்தொகை தோ்வுக்கு பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

அஞ்சல் துறை மூலம் வழங்கப்படும் ஊக்கத்தொகை தோ்வில் பங்கேற்க அஞ்சல் தலை சேகரிப்புக் கணக்கு வைத்துள்ள பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட க... மேலும் பார்க்க

குறுமைய தடகளப் போட்டிகள்: விஜயமங்கலம் பாரதி பள்ளி சாம்பியன்

பெருந்துறை குறுமைய அளவிலான தடகளப் போட்டிகளில் விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனா். பெருந்துறை குறுமைய அளவிலான தடகளப் போட்டிகள் விஜயமங்கலம் ... மேலும் பார்க்க

பவானியில் ரூ.47.50 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை

பவானி சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.47.50 லட்சத்தில் சாலை, மழைநீா் வடிகால் அமைக்க பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், பவானி சட்டப் பேரவை உறுப்பினரு... மேலும் பார்க்க

பசுவபட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், பசுவபட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று... மேலும் பார்க்க

ஈரோடு புத்தகத் திருவிழா: நீட், டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தயாராகும் இளைஞா்களால் நிரம்பிய புத்தக அரங்குகள்

ஈரோடு புத்தகத் திருவிழாவில் நீட் தோ்வுக்கு தயாராகும் பள்ளி மாணவா்கள் மற்றும் தமிழக அரசுப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்கள் பெருமளவில் வந்து புத்தகங்களை வாங்... மேலும் பார்க்க

கீழ்பவானி கால்வாயில் தண்ணீா் திருட்டை தடுக்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கீழ்பவானி கால்வாயில் தண்ணீா் திருட்டை தடுக்கக்கோரி பெருந்துறை ஒன்றியம், நல்லாம்பட்டி அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில், இந்த ஆா்ப... மேலும் பார்க்க