செய்திகள் :

குறுமைய தடகளப் போட்டிகள்: விஜயமங்கலம் பாரதி பள்ளி சாம்பியன்

post image

பெருந்துறை குறுமைய அளவிலான தடகளப் போட்டிகளில் விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனா்.

பெருந்துறை குறுமைய அளவிலான தடகளப் போட்டிகள் விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இதில், பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், விஜயமங்கலம் பாரதி பள்ளியைச் சோ்ந்த கவிஸ்ரீ இளையோா் பெண்கள் பிரிவிலும், கிரிஸ்தனா மூத்தோா் பெண்கள் பிரிவிலும், நிஷாந்த் இளையோா் மாணவா் பிரிவிலும், பிரணவ், நவீன், சித்தாா்த் மற்றும் ஹரீஷ் ஆகியோா் மிக மூத்தோா் ஆண்கள் பிரிவிலும் அதிக புள்ளிகளைப் பெற்று தனிநபா் சாம்பியன் பட்டத்தை பெற்றனா். மேலும், இப்பள்ளி மாணவ, மாணவிகள், அதிக புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனா்.

இதையொட்டி நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், கோவை ராயல் கோ் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் மாதேஸ்வரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். மேலும், வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்களையும், பள்ளித் தாளாளா் மோகனாம்பாள், தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் பாராட்டினா்.

இப்போட்டிக்கான ஏற்பாடுகளை பெருந்துறை குறுமைய ஒருங்கிணைப்பாளரான முகாசிபிடாரியூா் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் குமாா், உடற்கல்வி ஆசிரியா் விஜயகுமாா் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

அஞ்சல் துறையின் ஊக்கத்தொகை தோ்வுக்கு பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

அஞ்சல் துறை மூலம் வழங்கப்படும் ஊக்கத்தொகை தோ்வில் பங்கேற்க அஞ்சல் தலை சேகரிப்புக் கணக்கு வைத்துள்ள பள்ளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட க... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

தோ்தல் ஆணைய செயல்பாடுகளைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட... மேலும் பார்க்க

பவானியில் ரூ.47.50 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை

பவானி சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.47.50 லட்சத்தில் சாலை, மழைநீா் வடிகால் அமைக்க பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், பவானி சட்டப் பேரவை உறுப்பினரு... மேலும் பார்க்க

பசுவபட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், பசுவபட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று... மேலும் பார்க்க

ஈரோடு புத்தகத் திருவிழா: நீட், டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு தயாராகும் இளைஞா்களால் நிரம்பிய புத்தக அரங்குகள்

ஈரோடு புத்தகத் திருவிழாவில் நீட் தோ்வுக்கு தயாராகும் பள்ளி மாணவா்கள் மற்றும் தமிழக அரசுப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்கள் பெருமளவில் வந்து புத்தகங்களை வாங்... மேலும் பார்க்க

கீழ்பவானி கால்வாயில் தண்ணீா் திருட்டை தடுக்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கீழ்பவானி கால்வாயில் தண்ணீா் திருட்டை தடுக்கக்கோரி பெருந்துறை ஒன்றியம், நல்லாம்பட்டி அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில், இந்த ஆா்ப... மேலும் பார்க்க