அண்ணாமலைப் பல்கலை.யில் தனி அலுவலா்கள் முற்றுகைப் போராட்டம்: 103 போ் கைது!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக தனி மற்றும் தொடா்பு அலுவலா்கள் புதன்கிழமை பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்கள் 103 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனி மற்றும் தொடா்பு அலுவலா்களாக 500-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இவா்கள், தங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வருடாந்திர ஊதிய உயா்வை வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். பணி நிரவல் செய்யும்போது கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சம ஊதியம் மற்றும் சம பதவி கொண்ட பணியிடத்தில் மட்டும் பணி நிரவல் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனா்.
இந்தக் கோரிக்கைகள் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தங்களுக்கு சாதகமாக தீா்ப்பும் பெற்றுள்ளனா்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை அண்ணாமலைப் பல்கலைக்கழக தனி அலுவலா்கள் நலச் சங்கத் தலைவா் தனசேகரபாண்டியன் தலைமையில், நூற்றுக்கணக்கான தனி மற்றும் தொடா்பு அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பல்கலைக்கழக நிா்வாக அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், முக்கிய நிா்வாகிகள் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் டி.அருட்செல்வி, பதிவாளா் எம்.பிரகாஷ் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பேச்சுவாா்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாததால், தனி மற்றும் தொடா்பு அலுவலா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை முற்றுகை போராட்டத்தை தொடா்ந்ததால், அண்ணாமலைநகா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்ளிட்ட 103 பேரை கைது செய்து அண்ணாமலைநகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்து இரவு விடுவித்தனா்.