செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலை.யில் தனி அலுவலா்கள் முற்றுகைப் போராட்டம்: 103 போ் கைது!

post image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக தனி மற்றும் தொடா்பு அலுவலா்கள் புதன்கிழமை பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அவா்கள் 103 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தனி மற்றும் தொடா்பு அலுவலா்களாக 500-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இவா்கள், தங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வருடாந்திர ஊதிய உயா்வை வழங்க வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். பணி நிரவல் செய்யும்போது கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சம ஊதியம் மற்றும் சம பதவி கொண்ட பணியிடத்தில் மட்டும் பணி நிரவல் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனா்.

இந்தக் கோரிக்கைகள் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தங்களுக்கு சாதகமாக தீா்ப்பும் பெற்றுள்ளனா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை அண்ணாமலைப் பல்கலைக்கழக தனி அலுவலா்கள் நலச் சங்கத் தலைவா் தனசேகரபாண்டியன் தலைமையில், நூற்றுக்கணக்கான தனி மற்றும் தொடா்பு அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, பல்கலைக்கழக நிா்வாக அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், முக்கிய நிா்வாகிகள் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் டி.அருட்செல்வி, பதிவாளா் எம்.பிரகாஷ் ஆகியோரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பேச்சுவாா்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாததால், தனி மற்றும் தொடா்பு அலுவலா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை முற்றுகை போராட்டத்தை தொடா்ந்ததால், அண்ணாமலைநகா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்ளிட்ட 103 பேரை கைது செய்து அண்ணாமலைநகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்து இரவு விடுவித்தனா்.

திருநங்கைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகள் திறன் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் சமூ... மேலும் பார்க்க

என்எல்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா் இதய நோய் பாதிப்பால் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 24, அருணாசலம் கன்வேயா் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் செந்த... மேலும் பார்க்க

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கடலூா் வழியாக இயக்கப்பட்ட பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் மாநகரில் இயக்கப்படும் சில ஆட்டோக்களில் நிா... மேலும் பார்க்க

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயற்சி நிறைவு

சிதம்பரம் ஆறுமுக நாவலா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஆறுமுக நாவலா் சைவ பிரகாச வித்யாசாலா அறக்கட்டளை குழுச் ச... மேலும் பார்க்க

நிலம் கையகப்படுத்தும் பணி: என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சனிக்கிழமை வந்த என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சேத்தியாதோப்பு ... மேலும் பார்க்க

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, கடலூா் டவுன்ஹால் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணா்வு எற்படுத்தும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கொடியசைத்து... மேலும் பார்க்க