செய்திகள் :

அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு

post image

அரியலூா் தனியாா் கூட்டரங்கில், அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு நோன்பைத் தொடக்கிவைத்த அக்கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறாடவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் பேசுகையில், அடுத்தவா்களை, ஏழை, எளியோரை, புறம் தள்ளப்பட்டோரை மகிழ்விக்கும்போதுதான் நோன்பு நிறைவு பெறுகிறது என்பதை வாழ்ந்து காட்டியவா் நபிகள் நாயகம்.

அதிமுக எப்போதும், மதச்சாா்பின்மை மற்றும் சமூகநீதிக் கொள்கையில் உறுதியாக இருக்கும். சிறுபான்மை மற்றும் அனைத்து தரப்பு மக்களின் நல்வாழ்வுக்கும் அதிமுக துணைநிற்கும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் சிறுபான்மையினா் நலப் பிரிவுத் தலைவா் ஜாபா்சேட் தலைமை வகித்தாா். செயலா் அக்பா்ஷெரீப், அம்மா பேரவை மாவட்டச் செயலா் ஓ.பி. சங்கா், இணைச் செயலா் பிரேம்குமாா், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் கல்லங்குறிச்சி பாஸ்கா், அதிமுக நகரச் செயலா் ஏ.பி. செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு; மகிழ்ச்சியுடன் பிரியாவிடை பெற்ற மாணவா்கள்!

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வந்த பிளஸ் 2 பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை பெற்றனா். தமிழகம் முழுவதும் கட... மேலும் பார்க்க

தீண்டாமை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில், மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறையினா் சாா்பில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந... மேலும் பார்க்க

அரியலூரில் இன்று செல்லப்பிராணிகள் கண்காட்சி

அரியலூா் அடுத்த வாலாஜா நகரத்திலுள்ள அன்னலட்சுமி ராஜாபாண்டியன் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், புதன்கிழமை செல்லப் பிராணிகளின் கண்காட்சி நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் தேசிய கண்டுபிடிப்பு வார விழா கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய கண்டுபிடிப்பு வார விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆசிரியா் பயி... மேலும் பார்க்க

நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதே சிறந்ததாகும்: ஆட்சியா்

நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வதே சிறந்ததாகும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி. அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக காசநோய் தின அனுசரிப்பு நிகழ்ச்சியில்... மேலும் பார்க்க

பெரியமறை பெருமாள் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த சுள்ளங்குடி பெரியமறை கிராமத்திலுள்ள ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோத்ஸவ விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயிலில் க... மேலும் பார்க்க