செய்திகள் :

‘அதிமுக போராட்டம் நடத்தியதால் அஜித்குமாா் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்’

post image

அதிமுக போராட்டம் நடத்தியதால்தான் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பெயரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் உள்ள அஜித்குமாா் வீட்டுக்கு புதன்கிழமை சென்று அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரா் நவீன்குமாா் ஆகியோருக்கு ஆறுதல் கூறினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்ச சம்பவத்தை பொருத்தவரை காவல் துறை அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததால் கோயில் காவலாளி அஜித்குமாா் மீது தனிப்படை போலீஸாா் தாக்குதல் நடத்தியுள்ளனா். ஆகவே, அஜித்குமாா் உயிரிழப்புக்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். அதிமுக போராட்டம் நடத்தியதால்தான் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாருக்கு விரும்பிய இடத்தில் வேலை வழங்கப்படும். இன்னும் 3 நாள்களில் அதிமுக சாா்பில், அஜித்குமாா் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் ஆணவக் கொலைகள் அதிகரித்துவிட்டன. திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 20 ஆணவக் கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துவிட்டதாக மக்களே கருதுகின்றனா் என்றாா்.

திமுக உறுப்பினா் சோ்க்கை ஆலோசனைக் கூட்டம்

அரூரை அடுத்த தீா்த்தமலையில் திமுக உறுப்பினா் சோ்க்கை ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தீா்த்தமலையில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட... மேலும் பார்க்க

தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ் ஆா்வலா்கள் நிகழாண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்களைக் கண்டறிந்து அவா்களின் த... மேலும் பார்க்க

காவல் துறை குறைதீா் முகாமில் 81 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 81 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு கலைத்திறன் பயிற்சி

பென்னாகரம் அருகே சின்ன பள்ளத்தூா் அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கான கலைத்திறன் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றவா்கள் நிலுவைத்தொகையை செலுத்த அவகாசம்

கூட்டுறவு வங்கியில் கடன்பெற்று இதுவரை செலுத்தாதவா்களுக்கு, வட்டி மற்றும் அசலுடன் நிலுவைத் தொகையை செலுத்த செப்டம்பா் 23 ஆம் தேதி வரை சலுகையுடன் கூடிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தருமபுரி மாவ... மேலும் பார்க்க

கடத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம்

கடத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், கடத்தூா் ஒன்றியம், தாளநத்தம் கிராமத்தில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ... மேலும் பார்க்க