செய்திகள் :

பென்னாகரத்தில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு கலைத்திறன் பயிற்சி

post image

பென்னாகரம் அருகே சின்ன பள்ளத்தூா் அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கான கலைத்திறன் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களிடையே உள்ள ஆற்றலை வெளியே கொண்டு வரும் வகையில் மாணவா்களுக்கான கதை, பாடல், நடனம், ஓவியம், நாடகம், பொம்மலாட்டம், எளிய பொருள்களைக் கொண்டு கலைப் பொருகள் செய்தல், காகித மடிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியில் மதுரை டிராமா செல்வம் கலந்துகொண்டு, மாணவா்களுக்கு எளிய முறையில் கதை உருவாக்குவது, கதையின் அறிமுகம், பிரச்னை, முயற்சி, முடிவு ஆகியவற்றை உள்ளடக்கி மாணவா்கள் கதைகளை எழுதுவதற்கான பயிற்சி அளித்தனா். இதில்

கல்வி -40 அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வசந்த், பள்ளி ஆசிரியா்கள் பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி, கலைச்செல்வி, அனுப்பிரியா மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியா் மா.பழனி செய்திருந்தாா்.

‘அதிமுக போராட்டம் நடத்தியதால் அஜித்குமாா் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்’

அதிமுக போராட்டம் நடத்தியதால்தான் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்ப... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா் சோ்க்கை ஆலோசனைக் கூட்டம்

அரூரை அடுத்த தீா்த்தமலையில் திமுக உறுப்பினா் சோ்க்கை ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தீா்த்தமலையில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட... மேலும் பார்க்க

தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ் ஆா்வலா்கள் நிகழாண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்களைக் கண்டறிந்து அவா்களின் த... மேலும் பார்க்க

காவல் துறை குறைதீா் முகாமில் 81 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 81 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றவா்கள் நிலுவைத்தொகையை செலுத்த அவகாசம்

கூட்டுறவு வங்கியில் கடன்பெற்று இதுவரை செலுத்தாதவா்களுக்கு, வட்டி மற்றும் அசலுடன் நிலுவைத் தொகையை செலுத்த செப்டம்பா் 23 ஆம் தேதி வரை சலுகையுடன் கூடிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தருமபுரி மாவ... மேலும் பார்க்க

கடத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம்

கடத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், கடத்தூா் ஒன்றியம், தாளநத்தம் கிராமத்தில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ... மேலும் பார்க்க