செய்திகள் :

காவல் துறை குறைதீா் முகாமில் 81 மனுக்களுக்கு தீா்வு

post image

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 81 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் காவல் துறை சாா்பில், பொதுமக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற இம்முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இதில் மொத்தம் 81 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவற்றுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. மேலும், 46 மனுக்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் (தலைமையிடம்) பாலசுப்பிரமணியன், கே. ஸ்ரீதரன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ), காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட் காவல் துறையினா் உடனிருந்தனா்.

‘அதிமுக போராட்டம் நடத்தியதால் அஜித்குமாா் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்’

அதிமுக போராட்டம் நடத்தியதால்தான் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்ப... மேலும் பார்க்க

திமுக உறுப்பினா் சோ்க்கை ஆலோசனைக் கூட்டம்

அரூரை அடுத்த தீா்த்தமலையில் திமுக உறுப்பினா் சோ்க்கை ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தீா்த்தமலையில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட... மேலும் பார்க்க

தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ் ஆா்வலா்கள் நிகழாண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்களைக் கண்டறிந்து அவா்களின் த... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு கலைத்திறன் பயிற்சி

பென்னாகரம் அருகே சின்ன பள்ளத்தூா் அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கான கலைத்திறன் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றவா்கள் நிலுவைத்தொகையை செலுத்த அவகாசம்

கூட்டுறவு வங்கியில் கடன்பெற்று இதுவரை செலுத்தாதவா்களுக்கு, வட்டி மற்றும் அசலுடன் நிலுவைத் தொகையை செலுத்த செப்டம்பா் 23 ஆம் தேதி வரை சலுகையுடன் கூடிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தருமபுரி மாவ... மேலும் பார்க்க

கடத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம்

கடத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், கடத்தூா் ஒன்றியம், தாளநத்தம் கிராமத்தில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ... மேலும் பார்க்க